யசோதர காவியம்
இக்கவிதை நடை யசோதர காவியத்தை வடித்தவர்
திரு. பத்மராஜ் அப்பாண்டைநாதன் அவர்கள்
முட்டத்தூர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^ # ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
திரு. பத்மராஜ் அப்பாண்டைநாதன் அவர்கள்
முட்டத்தூர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^ # ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
முன்னுரை
:
யசோதர கவியம்
ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகும்.
இதன் நூலாசிரியர் சமணர் என்பதைத் தவிர, அவரைப் பற்றிய
செய்தி ஏதும் தெரியவில்லை.
சீர்திருத்தவாதியான மத்வாசாரியார் ஒரு மாற்றத்தைக் கொண்டு
வந்தார். யாகத்தின் போது, உயிர்பலிக்கு பதிலாக,
அரிசி மாவினால் செய்த உருவங்களைத் தெய்வத்திற்கு
பலியிடலாம் என்ற சீர்திருத்தம்
அது.
அதனையும் மறுத்து
எழுதியது தான் இந்நூல்.
பாவனைக் கொலை கூட வினைக்குக் காரணம்
ஆகும். மனதில் கொலை (
பலி ) என்னும் எண்ணமே,
தீவினைப் பயனாகி, பல பிறவிகள் வரை தொடர்ந்து வந்து துன்புறுத்தும் என்பதை
வற்புறுத்துகிறது இச்சிறுங் காப்பியம்.
ஒரு உயிருக்கு நேரிடுபவை
அனைத்தும், அதனது முன்வினைப்
பயனால் என்பதைத் தெளிவாக
கூறும் நூல்.
இந்நூலில் வரும்,
தாய், அரசி சந்திரமதியும், அவளது மகன், மன்னன்
யசோதரனும், ஏழு பிறவிகளை
எடுத்து, துன்புற்று, இப்பிறவியில்
அபயருசி, அபயமதியாய் பிறந்து,
வீடுபேறடைந்ததற்கு காரணம், மாக்கோழி
பலியினால் ஏற்பட்ட தீவினை
தொடர்ந்ததே என்பதை அழகுற விவரிக்கிறது. நான்கு
சருக்கங்களையும், 320 செய்யுள்களையும் கொண்ட காவியம்.
நான், பொருள் குறையாமல்,
260 செய்யுள்களாகச் சுருக்கி,
அனைவரும் காப்பியத்தின் பொருளைத்
தெரிந்து கொள்ளவேண்டும், என்ற ஆசையில், எளிய தமிழில் கவிதைகளாகக்
கொடுத்துள்ளேன். வீடூர் பூர்ணச்சந்திர சாஸ்திரியாரின்
உரையைத் தழுவி எழுதியது.
அன்னார்க்கு நன்றி
மனம்,
சொல், செயல் ஆகிய மூன்றும் தூய்மையுடன் இருக்க
வேண்டும்.
மனதால் ஏற்படும் பாவனை பலியும், கர்ம வினைக்கு வித்திட்டு,
பல பிறவிகள் துன்பத்தில்
உழல வேண்டும் என்பதை
உணர்த்துவது யசோதர காவியம்.
தமிழறியாத, ஒரு பொறியாளனாக,
நான் எழுதியுள்ள என் தமிழில் காணும்
குறைகளை, மழலையின் தமிழ் என ஒதுக்கி,
ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன் உங்கள்,
முட்டத்தூர்.
அ. பத்மராஜ்.
******************************
கடவுள் வாழ்த்து:
1
மூவுலகம் முழுவதையும்
முழுதுணர்ந்த திருநாதன்
முடிவற்ற ஞானகுணம் ஆழியாய்
கொண்ட அருகனின்
செங்கமலத் திருவடியை
தீவினைகள் நீக்கி விட்டு
அடி தொழுது நாம் பெறுவோம் மோட்சமாம்
வீடு தன்னை
2
முனிசுவ்ரத தீர்த்தங்கரரின் முழு ஞான உபதேசம்
திவ்யத் தொனியாக திகழ்கின்ற
காலத்தில்
திருவறப் பெருமையினால்
தீவினைகள் போக்கிவிட்ட
யசோதரனின் சரித்திரத்தை இனி இயம்பப்
போகின்றேன்
அவையடக்கம் :
3
தீபத்தின் ஒளியைப்
போல திருவறத்தின் நெறி தன்னை
இக்கவியில் காண்கின்ற ஏற்றமிகு
சான்றோரே
என் சொல்லின்
குற்றங்களை இகழாத மனம் கொண்டு
என் தமிழை ஏற்க என்று இறஞ்சுகிறேன்
உங்களிடம்
நூல் நூவல் பொருள் :
4
தீவினை வரும் வழியை திட்டமாய்
தடுப்பதையும்
நல்வினை இன்பந்தன்னை நலமுடன்
அடைவதையும்
தீவினை பயன் உயிர்க்கு தெள்ளென
உரைப்பதையும்
இந்நூல் மக்களுக்கு இனிதாக
எடுத்து இயம்பும்
முதல் சருக்கம்.
நாட்டுச் சிறப்பு
:
5
மலை அரசன் மாமேரு
மத்தியில் மருவி நிற்கும்
நாவலந்தீவினிலே நல்வளமுற்ற
பரதநாட்டில்
மது சொட்டும் மலர்வனமும்
முகில் தவழும் விண் கொண்டு
மண்ணுலக சொர்க்கம்
என்ற மாட்சி பெற்ற ஔதயநாடு
நகர் சிறப்பு
:
6
விண்ணுலக வானவர்கள் வேண்டும்
சுகம் பெறுவது போல்
அழிவற்ற அழகாபுரியின்
அத்தனை செல்வமும் கொண்டு
எண் திசையும் மண்ணுலகில் எந்த நாடும் இல்லையென்ற
எண் வகைச் சிறப்புடனே இருக்கும்
நாடு ராசமாபுரம்
7
மதில் வளர்ந்து விண்ணை
முட்ட முகில்கள் அதன் மேனி தழுவ
மாளிகைகள் வானவரின்
வலம் வரும் வழி மறிக்க
பண்ணிசையும் பாட்டொலியும் கேட்பவர்கள்
செவிகிறங்க
பவணலோக தேவர்களே
நகர் அழகில் சொக்கி
நிற்பர்
அரசன் சிறப்பு
:
8
முன்னோர்கள் முடிகொண்டு முறைநெறியில்
ஆண்டது போல்
மும்மடங்கு ஆட்சியினை
முகில் தரும் மழையினை
போல்
ஔதேய மக்களுக்கு அறநெறியில்
நலங்களெல்லாம்
மாரிதத்தன் மன்னன்
தந்தான் மங்கலங்கள் பெருகி
நிற்க
9
மாரிதத்தன் தந்த ஆட்சியிலே நாட்டு
மக்களும் தேவரானார்
மறம் நீங்கி
அறம் பெருகி மாநிலம்
மாண்பு பெற
திருவறம் செழித்ததனால் திரும்பாத
வீடு அடையும்
செவ்விய வழிகாணும்
தேர்ந்தாய்வோர் யாருமிலர்
வேனல் வரவு :
10
சுருண்ட நீள் கருங்குழலும்
சூடிய அணிகலன்களும்
மேனியில் தாங்கி
நிற்கும் மென்னிடை மங்கையராய்
கார்கால மழையினை போல் காதலைக் கொட்டுகின்ற
இளவேனிற் காலம் வந்து இன்பத்தை
வழங்கியது
வசந்த மன்னனை
வரவேற்றல் :
11
கோங்கு மரம் பூச்சொரிய
வாகை மரம் தென்றல்
வீச
கொட்டுகின்ற தேன் துளிக்கு வண்டினங்கள்
யாழிசைக்க
கருங்குயிலின் கானத்திலே காமன் அவன் மயங்கி
நிற்க
வசந்தமன்னன் வருகையினை
வனிதையர்கள் வரவேற்றார்
12
பூங்கொடிகள் மாதராக பூமியிலே
நடனமாட
மாமரங்கள் தன் கிளையில் பொன் தளிரை பூசிவிட
மல்லிகையும் மாதவியும் மணம் எழுப்பி சூழ்ந்து
வர
இளவேனில் இளவரசன்
இன்பமுற்றான் அக்காதலிலே
அரசனும் நகர மாந்தரும் வசந்த விழா அயர முற்படுதல்.
13
சோலைகளும் தோப்புகளும் தோரணம்
போல் வரவேற்க
வசந்த கால வேந்தனவன் வந்துவிட்ட
செய்தியினை
மாரிதத்தன் மன்னனுக்கு அந்நகர்
மாந்தர் செய்தி சொல்ல
வசந்தவிழா கொண்டாட
வேண்டியதை செய்க என்றான்
14
வேந்தனும் மாந்தர்களும் வசந்த விழாவை
விரும்பிட
மாந்தரில் ஒருசாரார்
மன்னனிடம் பகர்ந்து நின்றார்
மாரிதேவியின் மங்கலத் திருவிழா
ஐப்பசி அஷ்டமி நன் நாளில்
செய்திட மறந்தால்
வந்திடும் மாபெரும் தீங்கென்றார்கள்
15
நோய் பல தோன்றிடும்
மனம் நொந்திட செய்திடும்
போர் பகை கூடிடும் பொய்த்திடும்
வான்மழை
இன்னுயிர் கொல்லுவாள் இன்னும்
பல வினை செய்வாள்
தேவிக்கு சிறப்பினை
செய்வதே நலம் என்றார்கள்
அரசன் தேவிக்கு
பூசை செய்தல் :
16
திருவறம் அற்றதால் தெளிந்த
நற்காட்சி இன்மையால்
தேவிக்கு பூசை செய்யும் தேவமூட
குற்றத்தால்
அரச சின்னங்கள் அத்தனையும்
அணிந்து கொண்டு
தென் திசை தேவிக்கு சிறப்பினை
செய்க என்றான்
தேவியின் கோயிலை
அடைதல் :
17
ஏழுவகை தத்துவத்தின் கூர் அறிவு அற்றவர்கள்
என்றென்றும் அகமகிழ்வில்
ஏற்றமுடன் தொழுகின்ற
வெஞ்சினம் கொண்டவளும் வணங்கும் தகுதி அற்றவளுமான
சண்டமாரி தேவதையின்
சன்னிதிக்கு மன்னன் சென்றான்
அரசன் மாரியை
வணங்குதல் :
18
வீரக் கழல் அணிந்த
தோள் வலியான் மாரிதத்தன்
பாவமே உருவெடுத்து
பதுமையாய் நிற்பது போன்ற
சண்டமாரி தேவியின் தனிச்சிலை
வைத்திருந்த
கோயிலை வலம் வந்து கும்பிட்டு
தொழலானான்
19
மயில் கோழி பன்றி ஆடு எருமை பிற விலங்கினங்கள்
ஆண் பெண் இரட்டைகளாய் கட்டியதை
கண்ட மன்னன்
அங்க லட்சனங்கள் அழிவற்ற ஆண் பெண் இரட்டயரை
அரசன் பலி ஈந்த பின்பு
மாந்தர் பலி தொடங்குமென்றான்
20
கொலைவதை குற்றம் என்று கொஞ்சமும் வருந்தா
மன்னன்
வேலியே பயிரை மேய்ந்தால் பயிர் நிலை அறியா அரசன்
நரபலி ஒன்றைத் தந்தால்
தன்நிலை உயரும் என்று
நல்குடி இரட்டையரை
இவ்விடம் கொணர்க என்றான்
சண்டகருமன் தேடி சென்றபோது
அந்நகர்
சோலையின் கண் முனிவர்
சங்கம் வருதல்.
21
குன்றொத்த தவத்துடனும் குற்றமில்லா
மனதுடனும்
ஐநூறு நிர்கந்த
முனிகளோடு சிராவகர் கூட்டம்
தொடர
சுதத்தர் என்னும் மாமுனிவர்
ராசமாபுரம் சோலை ஒன்றில்
திருத்தலங்கள் வழிபட சங்கத்தோடு வந்து சேர்ந்தார்
சங்கத்தார் உபவாச தவம் கைகொள்ளுதல்
:
22
மலர்நிறை வனம் புகுந்த
மாதவத்தார் சுதத்தாச்சாரியார்
தாம் வந்த வழியினிலே தாமறியா
நிகழ்ந்த வினைகள்
தன்னை விட்டு நீங்குதற்கு
தமக்குரிய ஆசனம் கொண்டு
குறிப்பிட்ட காலம் வரை உபவாச விரதம் ஏற்றார்
சிராவகர் கூட்டத்தில்
உள்ள
இளைஞசர் இருவரின்
வணக்கம் :
23
மனதில் நல் ஒழுக்கங்கொண்ட மட்டில்லா
ஞானங்கொண்ட
அபயருசி அபயமதி
அண்ணன் தங்கை இருவரும்
சிராவகர் கூட்டம் தன்னில் தளர்ந்திட்ட மேனியுடன்
உளம் தளரா உறுதியுடன் சுதத்தரை
தொழுது நின்றனர்
சுதத்தாச்சாரியார் கருணையால்
இளைஞரை சரிகை செல்ல பணித்தல்.
24
இளம்பிறை ஒத்த இருவரின்
இளம் மேனி வாடல் கண்டு
அவர்களின் பசி அறிந்து அனசன தவத்தை நீக்கி
விதிப்படி உணவு உண்டு தம்மிடம் வருக என்ற
சுதத்தரின் சொல்லை
ஏற்று தொழுத பின் செல்லலானார்
( அனசன தவம் : குறிப்பிட்ட
நாள் உபவாசம் )
இளைஞர் சரியை செல்லுதல் :
25
மண மலர் மாலை இன்றி மணம் கமழ் சாந்து
நீக்கி
பொன்மணி அணிகள்
போக்கி தூய வெண்ஆடை
ஏற்று
சுல்லக வேடம் கொண்ட அபயருசியும் அபயமதியும்
ராசமாபுரத்தின் உள்ளே சரியைக்கு
செல்லலானார்கள்
26
நல்லற அமுதம் கொள்ள மெல்லடி எடுத்து
வைத்து
நுண்ணிய உயிர்களிடத்து
நல்லருள் விரும்பிக் காத்து
இல்லறத்தார் எதிர்கொண்டு ஈயும் துல்லிய தூய உணவை
ஏற்றிடும் நியமத்தோடு
இருவரும் நடந்து சென்றனர்
மன்னனேவல் பெற்ற சண்டகருமன்
இளைஞர்களை கண்டு கலங்குதல்.
இளைஞர்களை கண்டு கலங்குதல்.
27
இளமையில் கொண்ட துறவால் ஏற்பட்ட
வனப்பினாலே
பகைவரும் நேரில்
கண்டால் பகை நீங்கி
அன்பு கொள்வர்
மன்மதன் அழகினோடும் திருமகள்
எழிலினோடும்
எதிர்வரும் இருவரை
கண்டு சண்டகருமன் கலக்கமுற்றான்
இளைஞரை பலியிடப்
பிடித்து ஏகுதல் :
28
மனமது இரங்கினாலும் மன்னனின்
கட்டளையால்
இருவரையும் வலிதிற்
பற்றி சினம்நிறை உருவம்
கொண்ட
சண்டமாரி கோயில் நோக்கி
சண்டகருமன் செல்லும் போது
அபயருசி அபயமதி
அவர்கள் நிலை எண்ணலானார்
29
அறமற்ற மறவர் சூழ அபயருசி அபயமதி
செல்ல
அஞ்சுவாள் தங்கையென
அபயருசி துணிவு சொல்ல
ஆன்மா ஸ்வரூபமில்லை அழிவது
உடல் மட்டும் தான்
அவ்வுடல் பற்றுதனை
துறவுற்ற அன்றே விட்டோம்
என்றான்
30
வருவதை எண்ணி அஞ்சினால்
வரும் துன்பம் வந்தே தீரும்
அஞ்சுதல் துன்பம்
நமக்கு அதன் தீவினை
வருத்தும் நம்மை
அன்னையே நீயும் நானும்
விலங்குகதி சென்றோம் முன்னர்
சுதத்த முனிவர்
சொல்ல இப்போதும் கேட்டு
அறிந்தோம்
31
காற்றாடி போன்ற வினைகளால்
கதிநான்கில் சுழன்றிருந்தோம்
எடுத்திட்ட பிறவிகளோ
எண்ணிக்கையில் அடங்கிலாது
தீ நல் வினைகளுக்கு ஒப்ப அமைந்திடும்
பிறப்பும் இறப்பும்
இப் பிறவியும் அப்படியே
கழிந்திடும் கலங்காதென்றான்
32
எடுத்திடும் பிறவிகளில் அவ்வுடல்
பேண எண்ணி
ஐம்பொறி நுகர்ச்சி
இன்பம் அதைவிட வேறில்லை
என்று
செய்திடும் செயல்கள் எல்லாம்
சேர்ந்திடும் வினைகளாக
கழிந்திடும் பிறவிகளாய்
கருமத்தின் வினைகளுக்கு ஏற்ப
நரககதி வரலாறு
:
33
அனலினில் விழுந்தாற் போல் அளித்திடும் துன்பம்
நரகில்
முதல் நரகில் நரகன்
உயரம் ஒரு வில்லாய்
உயர்ந்திருக்கும்
ஏழினில் ஐநூறாகி எண்ணிலா
துன்பம் தாக்கும்
செய்திடும் வினைகளுக்கு
ஏற்ப துவங்கிடும் நரக வாழ்க்கை
( ஒரு வில்
: 8 அடி )
விலங்குகதி வரலாறு
:
34
ஆன்மனில் கலக்கும் வினைகள்
அளித்திடும் பிறவி தன்னை
அணுவினில்
தொடங்கும் விலங்கு ஆயிரம்
யோசனையில் முடியும்
ஒரு பொறி விலங்கில்
பிறந்து ஐம்பொறி விலங்கில்
சென்று
எண்வினை
செயலுக்கேற்ப எண்ணிலா உடல்கள்
பெறுவோம்
மனுஷ்யகதி வரலாறு
:
35
உத்சர்பிணி அவசர்பிணி காலம் மனித உயரத்தை
முடிவு செய்யும்
ஒரு முழம் உயரம் தொடங்கி
ஆறாயிரம் வில்லில் முடியும்
மனிதவுடல் எடுத்து இழந்தவை
கடல் மணலுக்கு ஒப்பதாகும்
அவரவர் வினைகளுக்கு
ஏற்ப மனிதகதி வாழ்க்கை
மாறும்
தேவகதி வரலாறு
:
36
நல்வினையும் தவமும் சேர்ந்தால்
நாடிடுவார் தேவலோகம்
செய்திடும் நல்வினைகட்கேற்ப தேவகதி
எடுத்து மகிழ்வர்
இரண்டு முழம் உயரம் ஆகி ஐந்தைந்து
வில்லை அடைவர்
தேவகதி பிறவிகள்
கூட எண்ணிக்கையில் அடங்காதாகும்
தேவ நரக யாக்கையின் விருப்பும்
வெறுப்பும் :
37
தேவ நரக யாக்கை
எல்லாம் இடையில் மரணம் அடைவதில்லை
விருப்பு வெறுப்பு
ஏற்படினும் வினைகாலம் வரை அங்கிருப்பர்
அன்பு கொண்ட தேவ யாக்கை அழிந்திடும்
தன் எல்லை தனில்
மனிதனாக பிறந்த
உடல் அழிவதில் ஐயம் உள்ளதோ
38
மண்ணுலகில் மனிதகதியில் மன்னராகப்
பிறந்திடினும்
எட்டு திக்கு
வேந்தரையும் தன் அடியில்
வீழ்ந்திடினும்
எடுத்து விட்ட மனித உடல் என்றென்றும்
நிலைப்பதில்லை
அன்று தொட்டு
இன்று வரை அழியா யாக்கை ஒன்றுமில்லை
39
எழில் நங்காய் அறிந்து
கொள் எவ்வகையில் ஆய்ந்திடினும்
பிறப்பு இறப்பு
எல்லாம் பழையன விட்டு
புதியன கொள்ளலே
இப் பிறப்பின் இவ்வுடலை எப்போதும்
நாம் விடலாம்
இன்னலைப் புறந்தள்ளி
இவ்வுடல் பற்றை ஒழித்திடுக
அபயமதி தன் உள்ளக்கிடக்கையை வெளியிடல்
:
40
அண்ணலே இவ்வுடலும் பொருளும்
என்னதே என்போர்க்கெல்லாம்
ஆற்றிய உம் அறிவுரைகள் அனைத்துமே
பொருத்தமாகும்
பற்றினை முற்றும் துறந்த
பாலராம் துறவிகளுக்கு
இம்மொழி தேவை தானா என்று கேட்டாள் அபயமதி
41
தீவினை உதயத்தாலே தீ அனைய துயர்கள்
உற்றோம்
நடுங்கிய நம் மனதை நல் தவ சுதத்தாச்சாரியார்
திருவறப் பயன்கள் தன்னை தெளியவே நமுக்குரைத்தார்
துஞ்சுதல் கண்டு அஞ்சல் துளியும்
நமக்கு இல்லை என்றாள்
42
மங்கையாய் பிறந்ததால் நான் மென்மனம் உடையேன்
என்றும்
மனதினில் வல்லிய
அறிவும் திண்மையும் இல்லை என்றும்
அண்ணலே அருள் உரைத்தீர்
ஆயினும் நான் பகர்வேன்
நற்காட்சி உடைய எனக்கு பிறவியில்
பற்றில்லை என்றாள்
இறுதியில் நினைக்க
வேண்டியது எதுவெனில் :
43
உயிரோடு தேன்றும் உடம்பில்
உயிர் உருவம் வேறென எண்ணி
உயிரினை உள்ளே நினைத்து உயர் அற மாட்சி
ஆய்ந்து
ஐம்பொறி வாயில் வென்ற அருகனின் அபயம் பெற்றால்
உடலினை விடுவோம்
என இருவரும் முடிவை
கொண்டார்
இருவரும் உயிரின்
இலக்கணம் உன்னுதல் :
44
கடையிலா அறிவினோடும் கடையிலா
காட்சியோடும்
எண்வகை குணங்களோடும்
ஐம்பொறி அறிய இயலா
உரையினில் இருக்கும் வாள் போல் உடலில்
இருந்து வேறதாகி
வடிவமும் மலமும்
அற்ற உயிரென உள்ளம்
ஏற்றார்
இரு மும்மணிகளை
எண்ணி மகிழ்தல் :
45
உயிர்க்கு நல் வினையை
பெருக்கி உலகிற்கு இறையாமை
அருளி
பிறவியாம் சுழற்சி
போக்கி பேரின்ப வீட்டைத்
தரும்
நற்காட்சி நல் ஞானம் நல் ஒழுக்கம் மூன்றும்
கொண்டு
மும்மணியாய் அடைந்ததாலே
முழுமகிழ்வு என்றுரைத்தார்
சித்தர் வணக்கம்
:
46
மூவுலக உச்சியின் மேல் முடிமணி ஒளியில்
விளங்கும்
எண்குணம் விளங்கப்
பெற்று எக்குற்றம் இல்லாராகி
பிறவியாம் துன்பம் நீங்கி
எண்வினைகள் போக்கச் செய்யும்
சித்த பரமேஷ்டிகளை
சிந்தையில் வைத்து வணங்கினர்
அருகர் வணக்கம்
:
47
பெருமலை ஒத்த காதிவினையை
பெரும்பகை படுத்தி வென்று
கடையிலா நான்கும்
பெற்று சமவசரண காட்சி தந்து
திரிலோக உயிர்கள் கேட்க திவ்யத் தொனியை
அருளிய
தீர்த்தங்கர தேவர்களின்
திருவடியை மனதில் தொழுதனர்
ஆச்சாரியர் வணக்கம்
:
48
ஐவகை ஒழுக்கம் தன்னை அணிகலனாய் அணிந்து
நின்று
எண்வகை மெய்ப்
பொருளை எளிமையாய் விளக்கிச்
சொல்லி
மேன்மையாம் திருவறத்தை மேன்மையுற
உபதேசித்து
அறங்கூறி தீட்சை
தரும் ஆச்சாரியர்களை பணிந்தனர்
உபாத்தியாயர் வணக்கம்
:
49
ஆகம நூல்களையெல்லாம் ஐயமற தெளிந்து கற்று
தீமைகளின் பிரிவு
நீக்கி சிறந்த நல் ஒழுக்கம் பயின்று
ஆறேழு ஆகமங்களை அவர் தம் மனதில்
தொகுத்து
நம் மன அழுக்கைப் போக்கும்
உபாத்தியாரை வணங்கினர்
சர்வசாது வணக்கம்
50
பிறவியை போக்கும் உருவம்
அறுகுணம் நிறைந்த உள்ளம்
குணங்களுக்கேற்ற செயலும்
முக்தியை அடையும் வழியும்
திகம்பர உடலினோடு விதிப்படி
உணவை ஏற்கும்
சர்வசாதுக்கள் அடியை தொழுதனர் இருகை கூப்பி
இது முதல் சண்டமாரி கோயிலில்
நிகழும் நிகழ்ச்சி :
51
தூய்மையாம் நினைவை ஆயும் சுடர் முக இளைஞர்களை
சண்டமாரி ஆலயத்தின்
கொலைகள பீடம் முன்னே
சண்டகருமன் நிற்க வைத்து
தள்ளியே நின்ற பின்பு
வீரக் கழல் அணிந்த
வேந்தன் மாரிதத்தன் வாளெடுத்தான்
இளைஞர் புன்முறுவல்
செய்தல் :
52
அங்க லட்சன நூலின் அமைப்புகள் அனைத்தும்
கொண்டு
நற்காட்சி நற்குணத்தால்
நடுக்கங்கள் ஏதும் இன்றி
மன்னனை வாழ்த்தச் சொல்லும்
மக்களின் கூச்சலிடையே
முற்பாவ நிகழ்ச்சி
நினைவில் புன்முறுவல் பூத்து
நின்றனர்
இளைஞர் மன்னனை
வாழ்த்துதல் :
53
மோகனீய கர்மம் நீங்கி
உயிர்வதை அனைத்தும் போக்கி
அறம் நிறை மனதினோடு அரிய பல் உயிர்க்கும்
அருளி
பிறவியை போக்கும் நல்ல திருவறம் தழுவி ஏற்று
நீடூழி வாழ்க மன்னா என நிறைமதி இளைஞர்
வாழ்த்தினர்
மன்னன் மனமாற்றம்
அடைதல் :
54
இளைஞர்கள் இருவரையும் இமைக்காமல்
நோக்கிய மன்னன்
மின்னொளி மேனியையும்
மதியொளி முகமும் கண்டு
மரணத்தில் நகைமுகம் காட்ட மனதினில் தளர்ச்சியுற்று
வித்யாதர தேவர்களோ
என விம்மினான் மனதிற்குள்ளே
அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின்
காரணம் வினவிய
வேந்தனுக்கு இளைஞர்
விடையிருத்தல்.
55
மரணத்தைக் கண்ட பின்னும் மனதினில்
அச்சம் இன்றி
நயனத்தில்
நகையை காட்டும் காரணம்
என்னவென்றால்
பழையவினை வெளியில்
வர பயமது நீங்கிப்
போக
நற்காட்சி
சிந்தையாலே நடுக்கத்தைத் துறந்தோம்
என்றார்
56
மாவினால் செய்த கோழியை மதிகெட்டு பலியிட்ட
பாவம்
பல பிறவி எடுத்து நாங்கள்
பட்ட துன்பம் எல்லையில்லை
உயிர்வதை செய்யும் உன்னை ஊர்மக்கள் வாழ்த்த
சொன்ன
மடமையை எண்ணி நாங்கள் மனதினில்
நகைத்தோம் என்றார்
அங்கு குழுமியுள்ள
நகர் மாந்தர் வியத்தல்
:
57
காண்பவர் மயங்கும் மேனியும்
கனியினும் இனிய சொல்லும்
ஆண் இன ஆண்மை அழகும்
அபயருசிக்கு அமைந்தபோதும்
மென்மையில் பெண்மை கொண்டும்
மனதினில் திண்மை கொண்ட
இப்பெண்ணின் ஆண்மை கண்டு வியப்பினில்
நின்றார் மக்கள்
மன்னனும் வியத்தல்
:
58
அபயருசி கன்னல் சொல்லும்
அந்நகர் மக்கள் மொழியும்
அரசனின் நெஞ்சம்
எல்லாம் அடைமழையாய் இன்பம்
கொட்ட
நீர் எடுத்து கழிந்த
பிறப்பும் நிலை பெற்ற இம்மை குலமும்
இளமையில் தவத்தை
ஏற்ற விபரங்கள் கேட்டான்
மன்னன்
அபயருசி மறுமொழி
:
59
அருள்நிறை நெஞ்சத்தோர்க்கும் அறநெறி
விரும்பினோர்க்கன்றி
தீசெயல் புரிவோன்
மனதில் என் மெய்மொழி
பதியாதென்றான்
ஆதலின் அரசே நீர் உன் அகத்தினில்
நினைத்ததைப் போல்
ஆகவேண்டிய நியதிகளை
அருள்கூர்ந்து செய்க என்றான்
வேந்தன் கருணைக்கு
பாத்திரமாகி மீண்டும் வினவல்
:
60
அபயருசி உதிர்த்த சொல்லால்
அருள்நிறை நெஞ்சனாகி
வாளினை உரையில்
இட்டு மனதினில் தீ நினைவை
போக்கி
மாக்கோழி பலியினாலே பலபிறவி
துன்பம் தூய்த்த
தெய்வமே என தொழுது தெரிவியும்
உம் பிறவிகள் என்றான்
அபயருசி அறிவுரை
:
61
மின்னலோடு இணைந்த முகில்
மேதினியில் உள்ளவர்க்கு
பொன்மலை அருகில்
சென்று பெருமழை பெய்வது
போல்
அபயமதி அருகில் இருக்க
அரசன் மகன் அபயருசி
மாரிதத்தன் மன்னனுக்கு
அறம் உரைக்க ஆரம்பித்தான்
62
மன்னனே உன் மனதின்
எண்ணம் மாறியதில் மகிழ்ச்சியே
தான்
உயிர்க்கு உறுதி பொருளாம் அருகன்
அறம் மனதில் ஏற்று
அனைத்துயிர்க்கும் கருணை கொண்டு
உயர்கதிக்கு செல்வாய் வேந்தே
நீ வினவிய
யாவும் நான் வரிசையில்
புகல்வேன் என்றான்
இது முதல் மூன்று கவிகளால்
இவ்வறவுரையின் பயன் கூறுகின்றனர்.
63
நெஞ்சில் நம்பிக்கை வைத்து
இவ்வறநெறி கேட்டோர்க்கெல்லாம்
வினைகளின் ஊற்று அடையும் பழைய வினை உதிர்ந்து
போகும்
இருவினை அழுக்கு நீங்கும்
மெய்வதை தெரிந்து தெளியும்
வீடுபேறடைவதற்கு மனம் பக்குவ நிலையை
அடையும்
64
மலம் நிறை உடலின்
மேலே மனம் கொண்ட ஆசை அகலும்
ஐம்புலன் நுகரும்
ஆசை அனலிடை மெழுகாய்
கரையும்
கொலைவதை கொடுமையெல்லாம் கதிரவன்
பனியாய் மறையும்
நெறிதவர் மாதர் மோகம்
நீரின் மேல் குமிழாய்
அழியும்
65
இறந்தவர் பிறந்ததில்லை இருவினை
ஏதும் இல்லை
பிறந்தவர் முயற்சியாலே
பெரும்பயன் அடைவார்ரென்றும்
அஞ் ஞான வாதத்தாலே அறிவினில்
மயக்கம் கொண்டோர்
மயக்கத்தை விட்டு
நீங்கி நல்மதி கொள்வார்
என்றும்
இளைஞர் தம் பழம்பிறப்பு
முதலியன
அறிந்த வரலாறு கூறல் .
66
நற்காட்சி தவமும் கொண்ட நல்லான்மா
சுதத்தாச்சாரியார்
எம் தந்தைக்கு
அருளினார் எங்களின் பிறப்பு
பற்றி
பழம்பிறப்பு உணர்வால் மீண்டும்
நாங்களே அறிந்ததையும்
இளைஞர்கள் இயம்பியதை
எல்லோரும் நம்பி கேட்டனர்
முதல் சருக்கம்
முடிவுற்றது.
இரண்டாம் சருக்கம்.
உஞ்சனியின் சிறப்பு
:
67
வரப்புயர்ந்த நீர் வளத்தால் வயல்கள்
எல்லாம் செழித்திருக்க
கன்னலும் கமுகும் நெல்லும்
கழனி எல்லாம் நிறைந்திருக்க
போகத்தில் அமரரும்
போற்றும் அழகிய அவந்தி
நாட்டின்
பல நகரில் தலைநகரம்
உஞ்சயனி எனும் பெருநகரம்
அசோகன் சிறப்பு
:
68
கட்டுத்தறிகள் முறிக்கும்
களிறு படையுடையவனும்
இந்திரனே இடம் பெயர்ந்து
இந்நகரம் வந்தது போன்ற
அவந்தி நாட்டு
மன்னன் அசோகன் என்னும்
பேரரசன்
சந்திரமதி மனவியுடன் தனி இன்பம் கொண்டிருந்தான்
இக்காப்பியத் தலைவனான யசோதரன்
பிறப்பு :
69
முழுமதி பெற்றெடுத்த
இளம்பிறைச் சந்திரன் போல்
சந்திரமதி பெற்றெடுத்தாள் தங்கமென
ஒரு மழலை
மகப்பேறு இல்லாத்
துயரை அசோகனின் மனம் கலைய
குலம் தழைக்கும் மழலைக்கு
யசோதரன் என பெயரிட்டான்
யசோதரன் மணம் :
70
நாளொரு மேனியுமாய்
பொழுதொரு வண்ணமுமாய்
மதக்களிறு போல் வளர்ந்தான்
மாபெரும் வீரத்துடன்
திருமகளின் முழுஅழகும்
சேர்ந்திருந்த அமிர்தமதியை
ஔபாசன விதிப்படியே யசோதரனும்
கைபிடித்தான்
யசோமதியின் பிறப்பு
:
71
இளவரசன் யசோதரனும்
இளம் நங்கை அமிர்தமதியும்
இல்லற இன்பத்திலே இருவரும்
இணைந்து மகிழ்ந்திருக்க
மங்கையவள் மணிவயிற்றில்
மன்னன் குலம் வளர்வதற்கு
மழலை ஒன்று பிறக்க
யசோமதி என பெயரிட்டனர்
அசோகன் துறவெண்ணம்
நிறைதல் :
72
அசோகன் வழி வளர பெயரன்
யசோமதி பிறந்ததிலே
ஆனந்தத்தில் மாமன்னன் ஆழ்ந்திருந்த
காலத்தில்
கண்ணாடி முன் நின்று தன் கம்பீர உருவம்
நோக்க
மின்னலென கருங்குழலில் நரைத்த
முடி கண்டு நொந்தான்
இளமை நிலையாமை
:
73
மலர் கணையான்
விடும் அம்பு மங்கைகளின்
மனம் மயக்கும்
காளையரின் இளமை கண்டு கன்னியர் கண் நிலம் நோக்கும்
முதுமை என்ற மூப்பாலே மங்கையர்கள்
சுகம் இழக்கும்
இளமையென்றும் மனிதருக்கு பழுத்த
இலை போலகுமென்றான்
துறவின் இன்றியமையாமை
:
74
மனிதருக்கு உடல் இளமை மாலை வீசும் தென்றலைப்
போல்
வீசுகின்ற தென்றல் என்றும்
நிரந்தரமாய் இருப்பதில்லை
சுற்றத்தோடு சொந்தங்களும்
துணையென்று வருவதில்லை
நிலையாத இவற்றை விட்டு
நிலையான தவம் பெரிதே
75
முற்பிறப்பின் நல்வினையால்
இப்போது நான் முடிமன்னன்
இப்பிறப்பில் மும்மடங்கு நல்வினையை
நான் செய்தால்
அகமிந்திரலோகம் சென்று
தேவசுகம் தூய்ப்பதற்கு
அருகன் அறம் கைகொண்டு
துறவு ஏற்க மனம் துணிந்தான்
யசோதரனுக்கு முடி சூடல் :
76
நிலையாமை தன் மனதில் நிலைபெற்று
நின்றுவிட
மாமன்னன் தன் மகன் யசோதரனை உடன் அழைத்து
மணிமுடியை சிரம் வைத்து மண்ணுலகை
ஆள்க என்று
சந்திரமதி மனம் வருந்த
தான் சென்றான் துறவு கொள்ள
அசோகன் துறவு :
77
வீரக்கெண்டை அணிந்த
அவந்தி மன்னன் அசோகன்
ஈரைம்பது அரசர்கள் எல்லோரும்
பின் தொடர
மெய்யொழுக்கம் மெய்யுடைய
மெய் குணதர முனிவரை
நாடி
அறங்கேட்டு துறவு கொண்டு
மலையேறி தவம் செய்தனர்
யசோதரன் அரசியல்
:
78
இமைக்கும் ஒளி ரத்தினங்கள் எழில் தவழும் அணிகலங்கள்
நவமணிகள் பதித்து செய்த நகையணிந்த மேனியோடு
வெண்கொற்ற குடைநிழலில்
வேற்றரசர் அடிபணிய
இருநிலத்து அரசன் யசோதரன்
இனிய ஆட்சி செய்து
வந்தான்
மன்னனின் மனமாட்சி
:
79
செல்வம் நிறைந்த
யசோதரன் செல்வச் செருக்கினாலே
பொருள் இன்பம் ஆசையாலே
அறம் வீடு மனம் நீக்கி
கடுங்காற்று வீசுவதால்
கடல் பொங்கி கலங்குதல்
போல்
ஆறு பகை உள்ளிருக்க
மனங்கலங்கி வாழ்ந்திருந்தான்
(6 பகை : காமம், குரோதம்,
உலோபம், மோகம், மதம், மாச்சரியம்
)
80
பணிந்திடா பகை அரசர்களை படை கொண்டு வாகைசூடி
பொன் பொருள் நாடுகளை
அடைந்திடும் வழியை தேடி
மண் பொன் ஆசையாலே மனதினில்
தினம் திட்டம் தீட்டி
கண் உறக்கம் மட்டுமின்றி
மன உறக்கம் மறந்து போனான்
81
கனிமொழி மாந்தர்களின்
கமல இதழ் பாட்டு
ஒலிக்க
பைங்கொடியர் கையிரண்டும் யாழ் எடுத்து பண்ணிசைக்க
மின்னற்கொடி அசைவது
போல் மென் இடையார்
நடனமிட
மன்னவன் யசோதரன் மயக்கத்தில்
நாள் கழித்தான்
யசோதரன் பள்ளியறை
சேர்தல் :
82
அரசவைக்கு வந்திருந்த
அரசர்களை அனுப்பிய பின்
அந்தப்புரம் நாடி சென்றான்
ஆண் களிறாய் யசோதரன்
அகிற்புகையும் சந்தனமும்
அறையெங்கும் மணம் வீச
கவரிமுடி சாமரை காற்றில்
காத்திருந்தான் மனைவிக்காக
அமிர்தமதி பள்ளியறை
சேர்தல் :
83
சிற்றடி சிலம்பு
ஒலிக்க தேன்மலர் வண்டிசைக்க
கைவளை மென்சிரிப்பில் இடை மேகலை கலகலக்க
கருங்குழல் பின் தவழ நறுமணம்
முன் நுழைய
அன்னமென அமிர்தமதி நடைபயின்றாள்
பள்ளியறைக்கு
இருவரும் இன்பம் நுகர்தல் :
84
ஐங்கணையான் விடும்
அம்பு அடைமழையாய் மேல் பாய
அமிர்தமதி யசோதரனும் அடுத்தடுத்து
தழுவிக் கொள்ள
இருவுடலும் ஓருயிராய்
இணைய மென்படுக்கை அசைந்தொலிக்க
காமக்கடல் மூழ்கி இன்பமுத்து
தேடினார்கள்
இருவரும் இன்பம்
நுகர்ந்த பின் கண் உறங்குதல் :
85
சிலம்பிசையும் வண்டிசையும்
சிற்றின்ப யாழ் இசையும்
தென்றலென தழுவிவிட்டு தாலாட்டுப்
பாடிவர
மன்மதனின் சினம் கொட்டி மருவிய
நல் கலவியாலே
மன்னனும் மடந்தையும் மகிழ்ச்சியுடன் துயில்
கொண்டார்
பண்ணிசை கேட்டு
அரசி துயிலெழல் :
86
களிறு கட்டும்
சாலையிலிருந்து காதுக்கினிய கீதம் ஒன்று
அமிர்தமதி செவி நுழைய ஆரணங்கு கண் விழித்தாள்
கல்லையும் கரைத்து
விடும் கானத்தின் இன்னிசையால்
அனலிலிட்ட மெழுகாக அரசி அறநெறி தவறிவிட்டாள்
அரசி மயங்குதல்
:
87
அவந்தி நாட்டு
அரசன் தேவி அமிர்தமதி
இசையில் மயங்கி
செம்பவள வாய் சிந்தும்
இச்சிறந்த இசை அமிர்தமாகும்
இவ்விசையரசன் மங்கையர்க்கு
ஈனுகின்ற இன்பம் அது
விண்ணுலக சுகத்துக்கிணை என ஊழ்வினையால் மயங்கலானாள்
பெண்மையின் புன்மை
:
88
பெண்பிறவி எடுத்த
உயிர்கள் மின்னல் மனம் உடையதாகும்
விழையும் செயல் அத்தனையும்
விரும்பி உடன் பெற்று
தீரும்
உளத்தூய்மை அற்று போகும் உறுபழிக்கு
அஞ்சாமல் நிற்கும்
இத்தகைய சொற்களுக்கு இலக்கணமானாள்
அமிர்தமதி
குணவதி என்னும்
தோழி அரசியை உற்றது
வினவல் :
89
செவ்விய அவ்விரவு
கழிய தனித்திருந்த அமிர்தமதி
இன்னிசை இசைத்தவனை இதயத்து
மன்னன் ஆக்கி
நெஞ்சத்தில் பதித்த
நேரம் நெருங்கிய தோழி வந்து
தலைவனை பிரிந்த தலைவியாய்
தனித்திருப்பதேன் என்றாள்
அரசி தன் கருத்தினை குறிப்பாக
தெரிவித்தல் :
90
சென்று விட்ட முன் இரவில்
ஒருவன் செம்பவள வாயுடன்
சிந்தையை மயக்கிவிடும் தேன் கொட்டும் இசை பாடி
மனம் என்னும்
மதக்களிறை கீதம் என்னும்
அங்குசத்தால்
குத்தி துன்புறுத்தி என்னை துவளுர செய்தான்
என்றாள்
தோழி அறிந்தும்
அறியாள் போலக் கூறல்
:
91
நறுமணக் கருங்குழலாள்
நற்குணத்தால் குணவதியும்
அமிர்தமதி மனச்செயலை ஐயமறத்
தெரிந்திருந்தும்
கனவினிலே கண்ட பொருள் உன் தகுதிக்கு இழிந்ததென்று
அறியாதாள் போல அவள் அன்புடனே கூறி நின்றாள்
அரசி மீண்டும்
தன் கருத்தை வெளிப்படையாக
கூறல் :
92
என் மனக் களத்தினிலே எரிகின்ற
காமத்தீயால்
நான் அவனை கலவி கொள்ளும் ஆசையினை
நீ அறியவில்லை
என்றுரைத்த செய்தி
கேட்டு இரு செவியும்
பொத்திக்கொண்டு
இந்த இழிசெயல் எண்ணம்
உன் கற்பனையா என் கேட்டாள்
அரசி ஆற்றாமையால்
உயிர் விடுவேன் என்றல்
:
93
பண்ணிசை பாடியவன்
பவளவாய் அமுதம் பருகி
பாட்டினை கேட்டு மகிழ்ந்து
பரவசம் அடையேனாயின்
என் சொல்லை
மறுத்ததனால் நாமிருவர் நட்பினேர்
அல்ல
இசை கேட்டு மகிழ்வேன்
இல்லை எனுயிர் பிரியும்
என்றாள்
தோழி பாகனைக்
கண்டு மீளல் :
94
மாளவ பஞ்சமம் இசைத்தோன்
மன்மதன் போல் இருப்பானென
நாடியே சென்றவள் அங்கு நடுங்கினாள் உருவத்தைக்
கண்டு
பண்ணிசைத்த அட்டபங்கனின்
பேய் போன்ற உருவம்
கண்டு
களிப்பினில் மகிழ்ந்து போனாள் கள்ளக்
காமம் கழியுமென்று
தோழி பாகன் வடிவம் கூறல்
:
95
கோப்பெருந்தேவியே உனக்கு
கொடுந்துன்பம் தந்த பாடலோன்
அட்டபங்கன் என்னும் அவன் அவலட்சண பாகன் ஆவான்
கண்டதும் விழி தெறிக்கும் என கண்களைக் கரத்தால்
மூடி
கருத்தினை தெரிவிக்காமல் திரும்பினேன்
உமக்கு அஞ்சி
96
முடிச்சு போல் நரம்புகள் கட்டி முகமது மிகச் சிறியதாகி
நடையினில் கழுதையாகி நைந்திட்ட
விரலும் கையும்
குரங்கு போல் கூன் விழுந்து
குழிகொண்ட கண்களோடு
பற்களின் வரியும்
சந்தும் பார்பதற்கு பேய் போல் உள்ளான்
97
குங்குமப்பூ போன்ற மேனியாள் குணவதி
மேலும் சொன்னாள்
மெய்யில் முடை நாற்றம்
வீசும் மேனியில் புண் சீழ் வடியும்
சாதியும் குலமும்
தாழ்ந்து சரிசமம் உனக்கு
அவன் இல்லை
மனதினை சிறை படுத்தி
உன் மாபெரும் கற்பை காப்பாய்
அமிர்தமதி ஊழின் வலியால்
தன் மனம் காதலித்ததை
தோழிக்கு கூறல்.
98
வலிமையோடு செல்வம்
அழகும் வஞ்சியரை கெஞ்சச்
செய்யும்
தேவ இசை இசைத்து
எந்தன் தேகம் எல்லாம்
பரவி விட்டான்
பழவினையின் பயனோ இது பாவை என் நெஞ்சில்
வீழ்ந்தான்
எக்குறை இருந்தால் என்ன இசைக்காக அணைபேன்
அவனை
99
காரியம் தொடங்கும்
முன்பே காரணம் பயன் ஆய்தல் வேண்டும்
காரியம் முடிந்த பின்பு
ஆய்தலில் பலனும் இல்லை
காமத்தின் கடவுள்
எனக்கு இப்பாகன் மேல் கருணை தந்தான்
தாமதம் ஏதும் இன்றி தோழியே முடித்துவை
என்றாள்
தோழியின் அச்சம்
:
100
கோப்பெருந்தேவியே நீ மலர் அமர் தேவியாவாய்
– உன்
காதலின் அருள் உடையோன் உயிர்
விடும் தொழுநோயாளன்
மலர்கணை காமன் ஈந்த இந்த மாறுபட்ட சேர்க்கை
எண்ணி
மனமது வருந்தினாலும் நெஞ்செல்லாம்
நடுங்கி நின்றாள்
இக்காபியத்தின் ஒரு நீதியினை
ஆசிரியர்
தோழியின் வாயிலாக கூறுகிறார் :
101
இல்லற வாழ்க்கை
தன்னில் இணைந்திட்ட ஆண் பெண் இருவரும்
வாழ்க்கையில் வெறுப்பு கொண்டு
மனமது தவத்தைக் கொள்ள
துறவற நோன்பு
ஏற்று தீவினை அழிக்கும்
நோக்கில் இவளை
படைத்தான் பிரம்மன் என எண்ணியே மீண்டும்
சென்றாள்
102
கொஞ்சும் மொழியாள்
அமிர்தமதி குணவதி கொண்டு
சேர்த்த
குஷ்டனோயன் பாகனோடு காமத்தால்
முதிரப் பெற்று
தனியிடம் நாடிக்
கலவி களித்து இன்பம்
அடைந்து வர
மனைவி மனமாற்றம் ஏன் என மன்னன்
மனம் எண்ணியது
மன்னனின் பொய்யுறக்கமுணராத அரசியின்
செயல் :
103
அவைவிட்டு வந்த அரசன் அருஞ்சினம்
கொண்டவன் போல்
படுக்கையில் வந்து வீழ்ந்தான்
பொய் துயில் கொள்ளலானான்
அரசியோ அறைக்கு
வந்தாள் அரசனின் உறக்கம்
கண்டாள்
தன் காதலன் மேல் ஆசையாலே தனியிடம் நாடிச்
சென்றாள்
மன்னன் மனைவியின்
செயலைக் காண பின் தொடர்தல் :
104
கள்ளத்துயில் களைந்து
எழுந்து கையிலே வாளை ஏந்தி
நடப்பதை அறிந்து கொள்ளும்
நெஞ்சத்தின் ஆசையாலே
மயிலினை பின் தொடரும் மாபெரும்
சிங்கத்தைப் போல்
மனைவியின் பின் சென்று
மறைவிடத்தில் பதுங்கி நின்றான் 104
அரசி தாழ்ந்து
வந்ததற்காக
பாகன் வெருளல் :
105
கடைமகன் அட்டபங்கன்
காலம் தாழ்த்தி வந்த ராணியை
கருங்குழல் பற்றி இழுத்து
காரணம் கேட்டு சினந்து
இருகரம் ஓங்கி அடித்து துடியிடை
மண்ணில் துவள
கடுஞ்சின முகத்தினோடு கால்களால்
மிதித்து உதைத்தான்
அரசி மூர்ச்சை
எய்தல் :
106
ராகுவின் தாக்குதலால்
கலையிழந்த முழுமதி போல்
அடி உதையால் மிதிக்கப்பட்டு தெளிவிழந்த
அமிர்தமதி
பேச்சிழந்து மூச்சிழந்து
சில நிமிடம் தளர்ந்திருக்க
பாகன் மனம் பதைத்து
பாதத்தில் சிரம் தொழுதான்
அரசி மூர்ச்சை
தெளிந்து
காலம் கடந்ததற்கு
காரணம் கூறல் :
107
மென் உடலால்
அமிர்தமதி மெல்லத் தெளிந்து
எழுந்து
மனக்கள்ளக் காதலனை களிப்புடனே
நோக்கியவள்
என் மனதின் நாயகனே
வெஞ்சினம் நீ கொள்ளாதே
அரசன் அவை விட்டு
வர காலம் கடந்தது
என்றாள்
அரசியின் உறுதி மொழி :
108
உன் மீது கொண்ட காதல் உயிர் தழுவி சென்றுள்ளது
உன்னை விட இவ்வுலகில்
வேறொருவர் என் மனதிலில்லை
உன்னை நான் விட்டகலேன் உறுதியுடன்
பகர்கின்றேன் – என
அட்டபங்கன் பாகனுக்கு
அமிர்தமதி சொல்லுரைத்தாள்
மறைந்து நின்ற மன்னன் செயல்
:
109
தன் தேவி சொல்லனைத்தும் தனித்திருந்த
மன்னன் கேட்டு
கடுஞ்சினத்தால் கண்சிவக்க கை வீர வாளெடுக்க
உள்ளுணர்வு உள்ளம்
எழ உடைவாளும் உணர்ந்தது போல்
தெளிந்த மனதினனாய் தன்செயலை
விட்டு நின்றான்
110
எப்பாவம் செய்திடினும்
மாதர் கொலைவதைக்கு உரியர்
அல்லர்
அறிவிலா இப்பாகன், ஆண் என்னும் பெண் அனையன்
பகைநாட்டு மன்னர்களின்
தலைகொய்யும் இவ்வாளால்
இழிசாதி கொண்டோரை சிரம் கொள்ளல் வீரமில்லை
111
இத்தனை எண்ணங்கள்
இணைந்தன அரசனின் இதயத்தில்
மங்கையர் மோகம் களைந்தான் மகளீரின்
போகம் துறந்தான்
மதகளிறு போல் சினங்கொண்டு மலரணை வந்து அமர்ந்து
இனி செய்வதை எல்லாம்
சிந்திக்கத் தொடங்களானான்
மன்னன் காமத்தாலாகும்
தீமைகள் கருதுதல் :
112
இழிசெயல் காமம் என்றும் எதிர்மறை
எண்ணம் வளர்க்கும்
மண்ணிய புகழை அழிக்கும்
வருகின்ற பழியும் செழிக்கும்
மானத்தின் வன்மை உடைக்கும் மனதினை
கலங்கச் செய்யும்
ஆண்மை குணத்தை சிதைக்கும் அழித்திடும்
செல்வம் எல்லாம்
113
திருமகள் அனைய மனைவி திமிரிய
காமத்தீயால்
உயர்குடி பிறப்பை மறந்து
உயரிய ஒழுக்கம் துறந்து
சாக்கடை புழுவைப்
போல சாதியில் கடைமகனுக்கு
அடிமையாய் பேணச் செய்யும்
காமத்தை விடலே சிறப்பு
மண்ணாசை துறக்க
எண்ணுதல் :
114
மண் என்னும்
பெருமடந்தை மருவினார்க்கு சொந்தமில்லை
புண்ணியமும் நல் வினையும் சேர்ந்திருந்தால் உடனிருப்பாள்
கருமவினை சேரும்
போது கைவிட்டு அவள் பிரிவால்
மண் பெண் ஆசைகளை
மனம் விட்டு துறத்தல்
நலமே
மன்னன் தன் உள்ளக்கிடக்கையை மறைத்திருத்தல் :
115
உள்ளத்து துறவு தன்னை உடனிருந்தோர்
அறியாமல்
யசோதரன் வீற்றிருந்தான் இன்முகத்தோர்
பணி செய்ய
முறைப்படி அரசி வந்தாள் மதிமுகப்
புன்முறுவலுடன்
அரசனின் பக்கம் இருந்த
ஆசனத்தில் அவள் அமர்ந்தாள்
116
அரசன் மன அன்பை நீக்கி
ஊடலால் வாடுதல் போல்
கருங்குவள மலரினாலே கன்னியின்
மேல் மெல்லடிக்க
அடித்த அடி தாங்காதவளாய் அமிர்தமதி
நடிப்பில் கீழே விழ
பணிமகளீர் கூடி அங்கு பன்னிர்
துளியால் தெளியச்செய்தார்
117
மனதில் அவள் துரோகம் தாக்க முகத்தில் பொய் நகையுடனே
மலர் அடியை மெய்தாங்காமல்
மண் விட்டு சென்ற உயிர்
அருமையாய் மீண்டதென்று
அரசனும் மெய்போல் பரிகாசித்து
எண்ணத்தில் துயரம் தீய்க்க
ஏகினான் தனிமை நாடி
மன்னன் தாயிடம்
சேரல் :
118
மன்னனும் மனதில்
கொண்டான் மணிமுடியைய் துறப்பதற்கு
அன்னையை நாடிச் சென்றான்
அவள் அடியைச் சேயாய்
தொழ
சந்திரமதி மகன் பாசத்தால் யசோதரனை
உச்சி மோந்து
வெண்கொற்றக் குடை நிழலில்
நீடூழி வாழ்க என்றாள்
சந்திரமதி ஐயுறல்
:
119
பவழமாய் ஒளிரும்
மேனி பனி சூழ்ந்த
மதி போல் மங்கி
பால்லொத்த அழகிய வதனம் சூல் முகில் மறைத்த
பரிதியாய்
பெற்றவள் நெஞ்சம்
தன்னில் மகன் துயரில்
உள்ளான் என்று
கலங்கிய மனதினோடு காரணம்
கேட்டாள் அன்னை
அரசன் அமிர்தமதியின்
செய்கையை தன் தாய்க்கு
உள்ளுறையாக தெரிவித்தல் :
120
மதியோளி மதியை விட்டு மண்ணிருளில்
சேர்ந்தது போல்
அன்னையே இன்றிரவு கனவில்
அக்காட்சி கண்டேன் என கூற
சண்டமாரி கோவில்
சென்று தேவிக்கு சிறப்பு
செய்தாயானால்
தீமைகள் விலகும் என்று அன்னையும் அவனிடம்
சொன்னாள்
121
பூர்வபட்ச ஐப்பசி
திங்கள் அஷ்டமி திதி செவ்வாய் அன்று
தேவிக்கு நின் கரத்தால்
சிறுபலி கொடுத்தாயானால்
காளியின் கடுஞ்சினம்
தணிந்து கனிவுடன் உன் பலியை ஏற்று
ஆசி உனக்கு அளித்திடுவாள்
அருந்துன்பம் மறைந்தே போகும்
122
மாதரசி மகனின்
மேலே மண்டிய நல் பாசத்தாலே
மேலும் அவள் மொழிந்தாள்
உயிர்பலி தருவதற்கு
இளங்குட்டி ஆடு ஒன்றை நீ நின் வாளால்
பலி கொடுத்து
தேவியின் அருளப் பெற்றால்
தீக்கனவு தீரும் என்றாள்
மன்னன் நெறியறிந்து
கூறல் :
123
அன்னையின் மொழியைக்
கேட்ட அறநெஞ்சன் யசோதரனின்
செங்கரங்கள் செவியை மூட செம்மையாம் மனது கலங்க
என் உயிர் பலனை நாடி மண்ணுயிரை வதைத்தேனாகில்
காவலன் என்ற பெயர்க்கு கண்ணியம் இன்றி போகுமென்றான்
124
என்னுயிர் வாழ்தல்
எண்ணி எளியவர் உயிரைக்
கொன்றால்
விண்ணவரின் உயர்ந்த இன்பம்
வரும் நெறி நீங்கிப்
போகும்
உடலோடு உயிர் நுகர் இன்பம்
நிலையென எண்ணி வாழ்ந்தால்
மண்ணினில் மக்கள் வாழ்வு
மாய்வது இயல்பு தானே
125
அன்னையே உன் குலத்து முன்னோர்
உயிர்வதை செய்தாரில்லை
கொலைவதை என்றும் தீமை உம் குலவழி
ஒன்றே நன்மை
இன்று நாம் உயிரைக் கொன்றால்
இடர்பல தொடர்ந்து வரும்
இம்மையில் இன்பம் போகும்
மறுமையில் மோட்சம் நீங்கும்
மன்னனை மாக்கோழி
பலியிடப் பணிதல் :
126
மன்னனின் மறுமொழி
கேட்ட மறம் நிறை மதியாள் சந்திரமதி
மனதினில் கோபம் கொண்டு
மகனிடம் கூறலானாள்
உயிர்பலி தர அஞ்சினால் நீ அரிசி மாவில்
கோழி செய்து
தேவிக்கு பலியை ஈந்து சிறப்புகள்
செய்வாய் என்றாள்
127
அமிர்தமதியின் அழுகிய
மனதை அன்னைக்கு குறிப்பால்
உணர்த்த
கனவினை வகுத்துக் கூற அன்னை கனவுக்கு
சாந்தி சொல்ல
என் ஊழ்வினை
உடன் வந்து தீவினை
பயக்கும் நிலையை
நீக்குபவர் யாருளர் என்று எண்ணினான் யசோதர மன்னன்
128
அரிசிமாவில் உருவம்
செய்து அளித்திடும் பலியும்
கூட
கொலைவதை போன்றதாகும் என குற்ற
உணர் நெஞ்சனாகி
அன்னை மேல் கொண்ட அன்பால்
அறிவுரை சொல்வாரின்றி
உருவக்கொலை செய்வதற்கு உள்ளத்தால்
இசைந்தான் மன்னன்
129
மாவினால் செய்த கோழியை மன்னன்
கரத்தில் ஏந்தி
மறநெஞ்சாள் தாயினோடு மாரி வாழும் கோயில்
சென்று
செவ்வியா விழா எடுத்து சிறப்புடன்
வணக்கம் செய்து
தன் வாளைக் கையில்
ஏந்தி கோழியின் தலையை கொய்தான்
மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து
கூவுதல் :
130
மாக்கோழி அழகைக்
கண்டு வான் செல்லும்
தெய்வம் ஒன்று
உள்ளத்தில் உவகை கொண்டு
கோழியின் உள்ளே அடைய
அரசன் தன்வாளால்
வெட்ட அதன் தலை அறுந்து வீழ
கூக்குரலில் கூவித் துடிக்க
குலை நடுங்க வாளை எறிந்தான்
131
மாக்கோழி உள்ளே தெய்வம் மறைந்ததை
அறியா மன்னன்
அறமற்ற அன்னை சொல்லாலும்
அருளில்லா தன் செயலாலும்
மனைவியின் இழிமனதாலும்
மலர்ந்த தன் தீ வினையாலும்
கோழியின் வலியக் குரல் கொன்றது மன்னனின்
மனதை
அரசன் துறவு மேற்கொள்ள விழைதல்
:
132
இறைமன நினைவுகளோடும்
இருள் நிறை மனதினோடும்
மாநகர் அடைந்த மன்னன்
யசோமதிக்கு முடியை சூடி
துறவறம் கொள்ளும்
நோக்கை கொடியவள் அமிர்தமதி
அறிய
மன்னனை மாய்ப்பதற்கு மனதினில்
சதியைக் கொண்டாள்
133
மணவறம்
எனை ஏற்ற வேந்தே
துறவறம் நீர் ஏற்பாயாகில்
உம்முடன் துறவு ஏற்க என் உள்ளத்தில்
விழைவு கொண்டேன்
அன்னையும் நீரும்
மகனும் என் கையால்
அமுதம் கொண்டால்
அரசுரிமை மகனுக்காகும் அதன் பின்பு துறப்போம்
என்றாள்
134
தீவினை உதயம் ஆனால் நயவஞ்சகமும்
நல்நீதியாகும் – என
மனைவியின் புழுத்த மனதை மன்னனும் அறிந்து
கொண்டான்
நஞ்சோடு கலந்த உணவை மாமிக்கும்
மணாளனுக்கும் ஈந்து
நஞ்சற்ற உணவை பிறரொடு
நயமாக உண்டு மகிழ்ந்தாள்
மன்னனும் தாயும்
விஷத்தால்
மடிந்து விலங்கிற்
பிறத்தல் :
135
நஞ்சது உடலில்
பரவ நடுக்கத்தில் அறிவு மயங்க
அஞ்சினர் மரணத்தாலே ஆர்த்தத்தியானம் மனதில்
எழ
தீவினைகள் உயிரில் சேர்ந்து
ஐம்பொறிகள் உணர்வும் கெட
விலகினார் இவ்வுலகை விட்டு
விலங்குகதி சென்றடைந்தார்
( தியானம் 4 விதம்
: 1. ஆர்த்தத்தியானம் : விலங்குகதிக்கு காரணம். 2. ரௌத்திரத்தியானம் : நரககதிக்கு காரணம். 3. தர்மத்தியானம் : மனிதர், தேவர்கதிக்கு காரணம். 4. சுக்லத்தியானம் : மோட்சகதிக்கு காரணம்
)
உழையர் தம் அரசியை இகழ்ந்து
வருந்துதல் :
136
அரசியின் செயல்கள்
இல்லை ஆன்றோர்கள் எண்ணம்
போல
அரசனாம் கணவனை நீங்கி
அவலட்சண பாகனை அணைத்தாள்
கொண்டவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடும் பாவியாவாள்
பெண்களில் கொடிய நெஞ்சாள் என தாதிகள் இகழ்ந்தனரிவளை
விஷத்தால் இறந்ததை
அறியாது
மாக்கோழியை கொன்ற பாவத்தால் மரணம் நேர்ந்ததென்று
நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொளல்.
மாக்கோழியை கொன்ற பாவத்தால் மரணம் நேர்ந்ததென்று
நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொளல்.
137
தெள்ளியதோர் உருவம்
அமைத்து தெய்வமாக தொழுவார்
என்றும்
பக்தியில் பணிந்து கேட்டால்
பயன்களைத் தரும் அவ்வுருவம்
அறிந்தும் மாக்கோழி
பலியால் அகாலமரணம் வந்ததென்று
மாந்தரில் சிலர் கூறலானார்
விஷம் என அறிந்திடாமல்
நகரத்து அறிஞர்
கூறுதல் :
138
அறப்பொருளைக் காணவில்லை
அருந்தவத்தோர் காட்சி இல்லை
மறப்பொருளில் ஆட்சி செய்து
மங்கையரின் காமங்கொண்டு
இவ்வுலகப் பற்றின்
மீது இணையற்ற ஆசை கொண்ட
இந்நகர மன்னனுக்கு இயற்கை
மரணம் இல்லை என்றார்
யசோமதி முடி புனைந்து அரசனாதல்
:
139
மங்கல முரசு கொட்ட மக்களின்
வாழ்த்து ஒலிக்க
நவமணி பதித்த முடியை
யசோமதி சிரசில் ஏற்று
அருகனின் அறத்தை
விட்டு அணங்குகளை அணைத்து
மகிழ்ந்து
காமமாம் கடலில் மூழ்கி
களித்து இன்பம் காணலானான்
140
மலர் மகுட மாரிதத்தா வினைகளால்
நேரும் தன்மையும்
வேல்விழி மாந்தர் இன்பமும்
கொலைவதை கொண்ட பாவமும்
பெருநிலம் ஆளும் மறமும் பெறக்கரிய
நற்காட்சி இன்மையும்
நெஞ்சினில் நினைவு கொள் என அபயருசி மேலும்
சொன்னான்
இரண்டாம் சருக்கம்
முடிவுற்றது.
மூன்றாம் சருக்கம்.
யசோதரனும் சந்திரமதியும்
மயிலும் நாயுமாய் பிறத்தல் :
141
அருகன் நெறி ஏற்கவில்லை அகப் புறப்
பற்று அகலவில்லை
ஈட்டிய வினைகளோடு
இருவரும் இறந்து போன பின்
விலங்குகதி சென்றடைந்து
விலங்கிடை துன்பம் கொண்டு
பல பிறப்பு
எடுத்த அவர்கள் பிறப்புகளைப்
பகருகின்றேன்
142
விந்தியகிரி என்னும்
மலையில் விழி கவரும்
அழகிய மயிலின்
வயிற்றினில் கருவாய்
வந்து யசோதரன் வளரும்போது
நாயோடு வேடன் ஒருவன் விந்தியகிரி
மலைக்கு வந்து
கூரிய அம்பைக்
கொண்டு கொன்றிட்டான் அம்மயிலை
143
அம்படி பட்ட மயிலின் அழகிய உடல் பிளக்க
அகவிடும் மயிலின்
முட்டையை அரும்பிடும் மொட்டாய்
எடுத்து
பூங்கொடி வேடுவச்சியின்
மென்மலர் கையில் வைத்து
புதுக்கோழி முட்டைகளுடன்
பொரிக்கச்செய் என்றான் வேடன்
144
அவந்தி என்னும்
அழகிய நாட்டின் அரசியான
சந்திரமதி
தான்செய்த வினைப்
பயன்கள் தன்னோடு தொடர்ந்து வர
உஞ்சயனி சேரி ஒன்றில் ஒளிரும்
கூரிய பற்களுடன்
பெண் நாயாய் பிறப்பெடுத்தால் விலங்குகதி
சென்றதனால்
145
வளர்ந்தன அவ்விடத்தில்
வளமுடன் மயிலும் நாயும்
வளர்த்தவன் எடுத்து
வந்து வழங்கினான் மன்னனுக்கு
காமுகன் வாசம் செய்யும் கன்னிகள்
சூழ்ந்த மனையில்
அரண்மனை சுகத்தினோடு
அவையிரண்டும் வளரலாயின
146
மாமன்னன் யசோதரனாய்
மமதையில் வாழ்ந்த மாளிகையில்
அழகிய மயிலாய்
வந்து அஞ்சினான் ஏவலர்க்கெல்லாம்
பஞ்சினால் பொதிந்த
படுக்கையில் பாவைகள் பாதம் வருட
தூங்கிய யசோதரன்
மயிலாய் தரையினில் உறங்கலானான்
147
ஆவின் மடி கறந்த பாலில்
அருசுவை அன்னம் கலந்து
பசும்பொன் கிண்ணத்திலிட்டு பைங்கொடியர்
கொஞ்சி நிற்க
விருப்பின்றி உண்ட மன்னன் விலங்குகதி
எடுத்ததனால்
காலத்தில் கிடைக்கா
உணவுக்கு காத்திருக்கும் மயிலாயானான்
148
ராசமாபுர ராணி சந்திரமதி நல்லறம்
அனைத்தும் நீங்க
நாய் பிறவி இங்கு எடுத்து
எச்சில் உணவை இனிதே உண்டு
நல்தவ விரதம்
முற்றும் அற்று கொலை பலி கொண்ட மனதால்
தீவினை முழுதும்
சேர தீராத துன்பம்
அடைந்தாள்
149
கயமையே உருவம்
ஆன காமமே அறமாய்
கொண்ட
அழுகிய மனதை உடைய அமிர்தமதி
மறைவாய் சென்று
அட்டபங்கனை அணைத்து
அவனிடம் கலவி கொள்வதை
அந்த இடம் வந்த மயில் அவ்விழிச்
செயலைக் கண்டது
150
முப்பிறப்பு உணர்வால்
மயில் தன் தேவி இழிச்
செயலால்
பாய்ந்து சென்று
கொத்தியது பாகனின் கண்கள்
இரண்டை
சினங்கொண்ட அமிர்தமதி
திரண்ட ஒரு கல் எடுத்து
மயில் தலையை நோக்கி வீச மஞ்சை வீழ்ந்து
மயங்கியது
151
முன்பிறப்பில் தாயான நாய் முன்னே
ஓடி மயிலைக் கவ்வ
கல்லடி பட்ட மயில் கலக்கத்தில்
உயிர் துறக்க
நாய்கடி பட்டதாலே
நடுங்கி மயில் இறந்தது
என்று
மன்னனும் பலகை கொண்டு நாயினை
அடித்துக் கொன்றான்
யசோதரனாகிய மயில்
( 2வது ) முள்ளம்பன்றியாய் பிறத்தல் :
( 2வது ) முள்ளம்பன்றியாய் பிறத்தல் :
152
மன்னனாய் இருந்த
மயில் மறுபடியும் மரித்துப்
போக
முள்ளுடல் கொண்ட பன்றியாய் விந்தியகிரி
மலையில் பிறக்க
சந்திரமதி ராணியாகிய
நாயும் தன் பேரன் யசோமதி கையால் மாள
கரும்
பாம்பாய் பிறப்பெடுத்து விந்தியகிரி
மலையில் ஊர்ந்தது
153
முள்ளம்பன்றி பசியினாலும்
முன் பகை மனதினாலும்
ஊர்ந்திடும் பாம்பின்
மீது முள்ளோடு உருண்டு
கொன்று
உடலினில் வலிமை குன்றி சோர்வோடு
இருக்கும் சமயம்
வெஞ்சினக் கரடி ஒன்று கொன்றது
முள்ளம்பன்றியை
மன்னனாகிய முட்பன்றி
( 3 வது ) லோகித மீனாய் பிறத்தல் :
( 3 வது ) லோகித மீனாய் பிறத்தல் :
154
மன்னன், மாமயில்
பன்றியாய் மாறி மாறி எடுத்த உயிர்
இருகரை நீரால்
நிரம்பி மறுகரை தெரியா
ஆறும்
உஞ்சயினி நகர்புறம்
ஓடும் சிருப்பிரை ஆற்றின்
உள்ளே
லோகித மீனாய்
பிறந்தான் பிறப்பினில் மூன்றாதாகி
சந்திர்மதியாகிய நாகம்
( 3 வது ) முதலையாய் பிறத்தல் :
( 3 வது ) முதலையாய் பிறத்தல் :
155
சந்திரமதி, நாய் கருநாகம் என சந்தித்த பிறவிகள்
உயிர்
சிருப்பிரை ஆற்றின்
நீரில் முதலையாய் பிறப்பெடுத்து
தீவினை கர்மத்தாலும்
மனதின் வைரபாவத்தாலும்
மீனினை முதலை விழுங்க வர கூனியை கொண்டது
முதலை
156
மும்மலர் சூடிய கூனியை முதலை ஒன்று விழுங்கிய
செய்தி
யசோமதி செவிக்குச்
செல்ல முதலையை கொல்க என்றான்
மீன் வலை கொண்டு மீனவர்
மின்னலென விரைந்து சென்று
வலையில் முதலையை
பிடித்து வாளினால் வெட்டி கொன்றனர்
சந்திரமதியாகிய முதலை
( 4 வது ) பெண் ஆடாய் பிறத்தல் :
( 4 வது ) பெண் ஆடாய் பிறத்தல் :
157
சந்திரமதி நாயாய்
பிறந்தாள் நாய் இறந்து
கருநாகமானாள்
நாகத்தை பன்றி கொல்ல முதலையாய்
பிறப்பெடுத்தாள்
மீனவர் கை வாளினாலே முதலையும்
மரித்துப் போக
புலையர்கள் வாழும்
சேரியில் பிறந்திட்டாள் பெண் ஆடாக
158
மன்னனின் மூன்றாம்
பிறவி உலோகித மீனாய்
மாற
அறம் அற்ற அந்தணர் சிலர் அரசன் யசோமதியை
நாடி
உன் குல முன்னோர்கட்கு உயர்ந்த
ஜீவ சிராத்தம் செய்ய
உன்னத உலோகித
மீன் ஒன்று சிருப்பிரை
ஆற்றில் என்றனர்
159
உயிருடன் வாழும்
மீனின் உருப்பினை கொஞ்சம்
வெட்டி
யசோமதி வேந்தன்
புவியை ஏற்றமுடன் சிறப்பாய்
ஆள
உள்ளத்தில் கொடிய அந்தணர் ஓமாக்கினியில்
மீனை வாட்டி
மீனினை உண்டு உண்டு வாழ்த்தினர் மன்னன் குலத்தை
160
மிஞ்சிய மீனின்
உடலில் எஞ்சியே செல்லும்
உயிரால்
அவதிக் ஞானம் பெற்ற
அந்த மீன் தன் பிறப்பறிந்து
என்னுடலை மெல்லத்
தின்று எனை தேவலோகம்
செல்ல வாழ்த்தும்
அறமற்ற
அந்தணரை எண்ணி முற்பிறவி
யசோதரன் இறந்தான்
மன்னனாகிய உலோகித
மீன் ( 4 வது ) தகராய் பிறத்தல்
:
161
உலோகித மீனாய்
பிறந்து உயிரினை விட்ட யசோதரன்
பெற்றாள் மீண்டும் விலங்குகதி பெண் ஆட்டின் கருவில்
மலர்ந்து
முட்டும் ஆண் ஆடாய் பிறந்து
முதிர்ந்த பருவத்தை அடைந்து
ஈன்ற தன் தாயை அணைத்து
இணைந்தது உடல் காமத்தாலே
தகர் ( 5 வது )
மீண்டும் தன் தாயின்
கருவில் தகராதல் :
162
தாயினை வன் காமத்தாலே
தகரது புணரும்போது
அந்த ஆட்டினை
கூடுதற்கு அதிசினம் கொண்ட ஓர் ஆடு
தகரினை தாக்கி
மோத தகரான யசோதரன் மாய
தான் புணர்ந்த
விந்தினாலே தாய் வயிற்றில்
கருவானான்
( தகர் : ஆண் ஆடு
)
163
அன்னையின் கருவில்
சேர்ந்து கரு முற்றி
ஆடாய் வளர
வேட்டைக்கு விழைந்து
சென்ற வாள் கொண்ட யசோமதி
வனத்தில் சினை ஆட்டைக் கண்டு வாளினால் வெட்டி
கொன்றான்
வயிற்றிலிருந்த குட்டியதை
புலையனை வளர்க்க சொன்னான்
யசோமதி பலியிடும்
செய்தி கூறல் :
164
சண்டமாரி கோயில்
சென்றான் சக்கரவர்த்தி யசோமதி ஒருநாள்
முறைபடி தேவியை
வணங்கி மோகத்தில் வேட்டைக்கு
சென்று
பலவுயிர் கொன்று
மகிழ்ந்து படையுடன் ஆலயம் வந்து
எருமையை பலியாய்
ஈந்து அம்மனுக்கு சிறப்பு
செய்தான்
165
எருமையின் கறியைக்
கொண்டு எரிகின்ற தீயில்
இட்டு
நின்குல முன்னோர்கட்கு
சீர்பெரும் சிராத்தம் செய்து
ஊனினை உண்டோமாகில்
உன்குலம் உயரும் என்றும்
வேறுபல நீதிகள்
சேர்த்து வேதியர் விளம்பினர்
வேந்தனுக்கு
166
கதிரவன் கடுங் கதிரினாலே காய்ந்து உலர்ந்த ஊனினை
காகங்கள் எச்சில்
ஆக்க கரைந்திட்ட புனிதம்
தன்னை
யோனியில் பிறவா ஆட்டின் வாயில்
ஊன் நுகருமாயின்
மீண்டிடும் ஊனின் புனிதம் தொடரலாம்
யாகம் என்றனர்
167
அந்தணர் கூற்றைக்
கேட்ட அரசன் யசோமதி
சொன்னான்
அம்பினால் பிளந்த
ஆட்டின் அகத்தினில் எடுத்த
குட்டி
புலையனின் வீட்டில்
வளர போய் அதை கொணரும் என்றான்
வேதியர் நயந்து
ஏற்று வேதயாகத்தை செய்யலானார் 1
168
நான்மறை ஓதும் மறையோர் யாகத்தை
நன்கு வளர்த்து
எருமையின் ஊனை எடுத்து
இளம் ஆட்டின் வாயில் வைத்து
தீயினில் ஊனை வாட்டி தின்றிடும்
வேதியரெல்லாம்
யசோதர மன்னனோடு
சந்திரமதியும் வாழ்க என்றனர்
இது முதல் ஏழு கவிகளில்
யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்.
யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்.
169
புலயனிடம் பறித்த
ஆடு பொங்கும் தீ யாகசாலையில்
பழம்பிறப்பு உணர்வினாலே
தான் யசோதரன் என்றறிந்து
பல பிறவி எடுத்து இன்று
நற்பிறப்பு ஆடாய் நின்று
இந்நாட்டு மன்னன்
யசோமதி என் மகன் என்றெண்ணியது
( நற்பிறப்பு
ஆடு : யோனியில்
பிறவா ஆடு )
170
உஞ்சயினி மாநகரம்
என் உரிமையான நந்நகரம்
இவ்விண் தொட்ட மாளிகையோ நான் வசித்த அரண்மனையாம்
பொன்னோடு பொருள்களெல்லாம் என் புழக்கத்தில் இருந்தனவாம்
தான் மட்டும்
ஆடாய் இருக்கும் காரணத்தை
எண்ணியது
171
தான் திரட்டிய
செல்வமெல்லாம் தன் மாளிகையில் இருக்கிறது
தான் வளர்த்திட்ட
களிறும் பரியும் தத்தம் சுகத்தில் திரிகிறது
தன் தீவினைப்
பயனினாலும் தான் சேர்த்திட்ட கருமத்தாலும்
தகராக நான் பிறந்தேன் என யசோதரன் எண்ணலானான்
172
அரண்மனை காவல் புரிவோர் ஆடிடும்
நடன மாந்தர்
படையினை நடத்தும்
தலைவர் பாடிடும் இசைப் பாட்டாளர்
இடும் பணி ஏவல்
செய்வோர் என் அடி பணியும் அரசர்
அனைவரும் உள்ளார்
இங்கு ஆடாக நானும்
உள்ளேன் இங்கு
173
அன்ன மெல் நடையுடைய என் மனைவி அமிர்தமதி
நஞ்சினை இட்டுக்
கொன்று நடுங்கிடும் துயர்வுறச்
செய்து
அட்டபங்கனை அணைத்து
காமத்தில் களிக்கிறாளோ
கண்களில்
படவேயில்லை என கலக்கத்தில்
எண்ணியதாடு
174
முற்பிறவி யசோதரன்
நான் இப்பிறவியில் ஆடாய் பிறந்து
பொருத்தமே சிறிதும்
இன்றி பொல்லாத துன்பம்
கொண்டிருக்க
இறச்சியை உண்ணும்
இவர்கள் என்னை வானுலகம்
செல்வதற்கு
வாழ்த்தினால் நிகழுமோ
என இகழ்ந்து மனம் வருந்தலானான்
175
பேய் மனது போதை மாது அமிர்தமதி ஆசைத் தீயால்
அமுதத்தில் நஞ்சு கலந்து அரசனாம்
என்னை கொன்றபின்
தீவினைப் பயனினாலே
நான் செய்த செயல் அறியேன் என்றும்
இனியாது செய்வதென்றும்
தெரியாது வருத்தங்கொண்டான்
சந்திரமதியாகிய பெண் ஆடு
( 5 வது ) எருமையாகப் பிறத்தல்
:
176
எண்ணில்லா சிந்தனையில் யசோதரன்
(ஆடு) மனதிலிருக்க
ஊழ்வினை கருமத்தாலே
உறுதுயரில் நெஞ்சம் உருகி
தன் மகன் யசோமதியின் மாளிகையில்
நொந்திருக்க
தன்னைப் பெற்ற பெண் ஆடு கலிங்கத்தில் எருமையானது
177
கலிங்கத்து வணிகர்களுடன்
கடும் சுமையை முதிகில்
தாங்கி
நாடு நகரம் எல்லாம் கடந்து
எருமை நடந்து திரிந்து
வர
உஞ்சயினி
நகர் அருகே சிருப்பிரை
நதிக் கரையில்
களைப்புற்று தங்கினார்கள்
களைப்பினை போக்கிக் கொள்ள
178
பாரம் சுமந்த
உடல் பட்ட துன்பம்
நீங்குதற்கு – எருமை
சிருப்பிரை ஆற்று நீரில் மூழ்கி
களைப்பை நீக்கிக் கொள்ள
அரசன் ஏறும் பரி
ஒன்று அக்கரைக்கு வந்து சேர
எருமை அதை முட்டியதால்
குதிரை உயிர் விட்டதங்கு
179
உடன் வந்த ஏவலர்கள் குதிரை
உயிர் விட்ட நிலை கண்டு
வேந்தனிடம் உரைத்தார்கள்
வணிகர் எருமை முட்டி
மாய்ததென்று
வணிகர்களின் பொருள்
கவர்ந்து அவ்வெருமையை பிணத்திழுத்து
என்னிடம் வருக என சினங்கொண்டு
ஆணையிட்டான்
180
அரசனின் ஆணை ஏற்று அருள் ஏதும் இல்லா ஆட்கள்
ஆற்றுக்கு விரைந்து
சென்று வணிகர்கள் பாசறை கண்டு
வணிகர்கள் பொருள்
கவர்ந்து எருமையின் கால்களைப்
பிணைத்து
கொணர்ந்தனர் அரசன் முன்னே கொற்றவன்
மகிழ்ச்சியுற்றான்
181
காதுகள் இரண்டை
அறுத்து காரநீர் வயிற்றில்
நிரப்பி
நீரினை கொதிக்கச்
செய்து நீண்ட வாளால்
வயிற்றைக் கீறி
காய்ச்சிய இரும்புக்
கோலை வயிற்றினில் விட்டு
கடைந்து
கூர்முள் சமட்டி
கொண்டு கொன்றனர் எருமை மாட்டை
182
அருளற்ற ராணி அமிர்தமதி அவ்வெருமையின்
வெந்த ஊணை
வாயினில் வைத்து
சுவைத்து வயிற்றினை நிரப்பிய
பின்
அரண்மனை வாழும்
ஆட்டின் தொடையினை ரசித்து
உண்டால்
தீர்ந்திடும் என் ஆசை என்று சேடிக்கு உரைக்கலானாள்
இது முதல்
5 கவிகள்
ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல் :
ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல் :
183
கனன்றிடும் காமநெஞ்சால்
காமனை ஒத்த அரசனை
நஞ்சிட்டு உயிரைக்
குடித்த ராட்சசி இவள் தன் என்றும்
மண்ணுலகம் காணா குரூபியை மானிட நாயாம் நீசனை
கலவியால் கூடிக்
களித்த கடைமகள் இவள்தனென்றனர்
184
குட்டமாம் கொடிய நோய் குடியிருந்த
மேனியுடைய
அட்டபங்க பாகனுடன் அமிர்தமதி கலவிய வாழ்வால்
பொன் மலர் மேனி கெட்டு பொங்கிடும்
எழில் குலைந்து
குட்டமாய் நோயில்
வீழ்ந்து கொடூர உருவம்
பெற்றாள்
185
அழுகிய நைந்த உடலும் அவயவங்கள்
குறையினோடும்
நீர் ஒழுகும்
புண்களோடும் சீழ்முடை நாற்றத்தோடும்
பால் வண்ண மேனியெல்லாம் பல நோய்கள் படர்ந்திருக்க
திருமகளாய் இருந்த
ராணி தெரு சாகடையாய்
மாறிபோனாள்
186
முற்பிறப்பின் தீவினையால்
அட்டபங்கனோடு சேர்ந்தாள்
இப்பிறப்பில் தீயநெஞ்சால்
ஏற்றுவிட்டாள் குட்ட நோயை
மறுபிறப்பில் நரகம் செல்வாள் மனமறிந்து
செய்த கொலையால்
செய்த வினை
அத்தனையும் தொடர்ந்திடும் வரும் பிறவிதனில்
187
தொழுநோய் விளைத்த
வினையாலும் தெளிந்த அறிவு இன்மையாலும்
திருவறத்தை மறந்து விட்டு
தீவினையை சேர்த்துக் கொண்டு
திரண்ட எருமை தசையினையும்
தகரைக் கொன்று ஊனை உண்ணும்
கடைமகளாய் கழிக்கின்றாள் என சேடியர்கள் இகழ்ந்துரைத்தார்
பவஸ்ம்ருதி அடைந்த
ஆடு ஆகலின்
சேடியர் கூறியதை அறிந்து வருந்தியது.
சேடியர் கூறியதை அறிந்து வருந்தியது.
188
சேடியர் வெளியே
வந்து சென்றனர் ஆட்டின்
அருகே
இதயத்தின் துயரத்தாலே
இகழ்ந்தனர் அமிர்தமதியை
தாதிகள் சொற்கள்
எல்லாம் யசோதரன் ஆடு கேட்டு
தன் மரணம் உணர்ந்ததாலே தன்வினையை எண்ணி நொந்தது
189
பொருந்திய மன்னனை வெறுத்து பாகனை மகிழ்ந்த பலனே
புழுத்திடும் தொழுநோய்
கொண்டு தாதியால் இகழப்பட்டாய்
துரோகத்தின் நெஞ்சத்தோடு
நஞ்சால் மாமியுடன் மகனைக் கொன்றாய்
எருமையின் ஊன்தின்று ஆடான என்னை உண்ணத்துணிந்தாய்
190
வஞ்சக நெஞ்சம்
கொண்ட விஷக்கொடி அமிர்தமதியை
அனல் தகிக்கும்
உள்ளத்தோடு ஆண் ஆடு அவளை நோக்கி
மொறு மொறு என்று கத்தி மனதின்
எண்ணத்தைக் கொட்ட
இழிந்தவள் கொல்லச் சொல்ல
இறந்தான் தகரான யசோதரன்
எருமையும் ஆடும் ( 6
வது ) கோழிகளாய் பிறத்தல்
:
191
எருமை ஆடு உடலை நீங்கி
உயிரது பிரிந்த பின்னே
உஞ்சயினி நகரின்
புறத்தே அமைந்த புறச்சேரி
தன்னில்
இரு உயிரும்
கோழியின் வயிற்றில் குஞ்சுகளாய்
பிறப்பெடுக்க
யசோமதி கண்டான்
அதனை உள்ளத்தால் கவர்ந்தான்
உடனே
192
குஞ்சுகள் இரண்டையும்
கண்ட கொற்றவன் யசோமதி
உடனே
சண்டகருமனை அழைத்தான்
கோழிகளை வளர்க்க பணித்தான்
கூண்டுக்குள் கோழிகளை
வைத்து கொடுத்திட்டான் பயிற்சி
அதற்கு
போர் திறன் மிகவும் கொண்ட கோழியாய் வளர்த்தான் அதனை
193
கூர் நோக்கு
விழிகளோடும் கொஞ்சிடும் அழகிய சிறகுகளோடும்
மாணிக்க மணியாய்
ஒளிரும் முடியொத்த கொண்டைகளோடும்
வைரத்தை ஒத்த கால்களில் பொன்னிற
நகங்களோடும்
போர் குணம் நெஞ்சத்தோடு பொருந்தியே
வளர்ந்தன கோழிகள்
மூன்றாம் சருக்கம் முற்றிற்று.
மூன்றாம் சருக்கம் முற்றிற்று.
நான்காம் சருக்கம்.
194
செந்தளிர் புதைந்த
சோலை தேன்மலர் தூவும்
தோட்டம்
வண்டுகள் பாடும் இசையும்
வளப்பத்தில் வளர்ந்த மரங்கள்
மதுவென பாடும்
குயில்கள் மயக்கிடும் தென்றல்
தழுவ
நறுமணம் எங்கும் வீச இளவேனிற் பருவம்
வந்தது
195
மணங்கமழ் பூக்களெல்லாம்
மழையென தூவி நிற்க
வளரிளம் அசோகத்தின் கீழ் வசந்த மண்டப மஞ்சம் ஏறி
சுருள் கருங் கூந்தலுடனும் சுந்தர
செவ்விய வதனத்துடனும்
பட்டத்தரசி புஷ்பாவலியுடன் பாராளும் யசோமதி இருந்தான்
196
யாழ்ழது மீட்டும்
இசைக்கு யவ்வனப் பாவையர்
பாட
செந்நிற சிற்றடியோடும் சிறுகொடி
மென்னிடையோடும்
பொன்வளை அணிந்த
மகளீர் புரிந்திடும் நடனங்கண்டு
அரசனும் அரசியும் இணைந்து
அகமகிழ்ந்து இருந்தனர் அங்கு
197
வளர்மரம் மலர் சொரியும் வளம் மிகு வனத்தின்
உள்ளே
தீவினை புரியும் கள்ளவர்கள
தீயன செய்யும் விலங்குகளை
மலையன மார்பன்
சண்டகருமன் மடக்கியே விரட்டும்
போது
முனிவரை தவத்தில் கண்டு முழுவுடல் பதிய தொழுதான்
198
அருவினை வெல்லும்
தன்மையை அகம் கொண்ட அகம்பன முனி
காலத்தின் எல்லை கொண்ட யோகத்தின் தியானம்
தெளிய
கூர்முனை அம்பும்
வில்லும் தாங்கிய சண்டகருமன்
வணங்கி
தியானத்தின் செயலும் பயனும்
செப்புவீர் எனக்கு என்றான்
199
அருள்நிறை மனதைக்
கொண்ட அகம்பனன் மாமுனியும்
நுண்ணிய அறிஞர் எல்லாம்
உணர்ந்திடுவர் உயிரை பற்றி
கடையிலா எண்குணங்களோடு
மூவுலக உச்சியில் நின்று
மோட்சமாம் வீடடையும் தன்மையாம் அவ்வுயிர்க்கென்றார்
200
அரசனின் ஆணை ஏற்று தண்டனை
தருவது என் வேலை
கள்வனை இரு பிளவாய்
கத்தியால் வெட்டிடுவேன்
பெருங்குற்ற தண்டனையாயின்
பலதுண்டாய் வெட்டுவேன் உடலை
உயிர் என்ற ஒன்றை மட்டும் சண்டகருமன்
நான் கண்டதில்லை
201
கள்வனை கொல்லும்
முன்பே காண்பேன் அவன் உடல்
எடையை
கள்வனை கொன்ற பின்பு
எடையினில் பேதம் காணேன்
குழியினில் உயிருடன்
புதைத்து மூடியே சிலநாள்
வைத்தும்
உயிர்
சென்ற வழியை காணேன் உயிரில்லை என்று கொண்டேன்
முனிவர் தளவரன்
ஐயத்தைப் போக்கல் :
202
காய்ந்திட்ட கட்டை விறகை கணுக் கணுவாய் வெட்டினாலும்
கட்டையின் உள் உறங்கும்
கடுந்தீயைக் காண்டோரில்லை
கட்டையை கட்டை கடையும் போது கனல் எழுந்து
தீயாய் மாறும்
உடம்பினில் உறையும் உயிரும்
தீக்கடைக்கோல் போன்றதகும்
203
தோல் துருத்தி பையினுள்ளே
பை நிறைய காற்றை
ஏற்றி
வாயினை இறுகக்கட்டி எடை செய்து
நோக்கிய பின்
காற்றினை வெளியே
நீக்கி துருத்தியின் எடையைக்
கண்டால்
இரண்டுமே ஒரே எடைதான்
இதுபோல் தான் உயிரும்
உடலும்
204
கடையிலா எண்குணமும்
கலந்ததே உயிரின் இயல்பு
இயல்பினில் மாறும் போது இருவினை உயிரில்
சேரும்
நல் தீவினை உயிரில் கலந்து நாற்கதி
உழன்ற உயிரையும்
இயல்பினதான உயிரையும் மும்மணி சான்றோர் அறிவர்
205
ஆகமம் அனைத்தும்
அறிந்த அறநெறி முனிவர்
நீங்கள்
உயிரது தத்துவத்தை முற்றிலும் இயல்பில் அறிந்தோராவர்
ஐம்பொறி வழியே செல்லும் மும்மூடம்
கொண்டோர்க்கெல்லாம்
அறத்தினை ஏற்கும் வழியை எளிமையில் சொல்வீர்
என்றான்
206
உயிர்கொலை, பொய், களவும்
பிறன்மனை சேரும் செயலும்
பொருளிடம் மனதின் பற்றும்
பொருந்திய இவ்வைந்தினோடும்
ஊனோடு தேன் கள்ளுண்ணாமை உதறிய இவ்வெட்டு நிலையே
நல்லொழுக்கம் மனிதர்கட்கு நாடிடும்
அறத்தை நோக்கி
207
கொல்லாமை ஆகிய அறம் குவலயத்தில்
மன்னன் மாட்சி தரும்
பொய்யாமை ஏற்றோர்க்கெல்லாம் புவியில்
பொன் மதிப்பு தரும்
களவின்மை கைகொண்டோர்க்கு விலையில்லா
அருளை தரும்
பிறன்மனை நயவாதோற்கு பெருமையுடன்
வலிமை தரும்
208
பொருளினில் பற்றில்லார்க்கு தெளிந்த
நல் ஞானம் கிட்டும்
ஊண் தேன் உண்ணாதோர்க்கு
உயர்ந்திடும் ஞானம் என்றும்
கள்ளுண்டு மயங்காதோர்க்கு கீர்த்தியும்
புகழும் கிட்டும்
இப்பண்புகள் கொண்டோரை பல்லுயிரும்
வணங்கிச் செல்லும்
209
திண்ணிய தோள்கள்
கொண்ட தளவர சண்டகருமனே
இல்லற தருமம் இவற்றை
ஏற்று நீ மகிழ் என்று அருள
கொலை தொழில்
தவிர்த்து ஏனை அறங்கள் அனைத்தும்
ஏற்பேன்
கொலை தொழில் ஒன்றே எனது
பிழைபென வாழுகின்றேன்
முனிவரர் மீண்டும்
கூறல் :
210
உயிர்களின் வதையைக்
கண்டால் உருகிடும் விழியில்
கண்ணீர்
தன்னுயிர் போல் எண்ணி அவற்றை கருணையால்
காத்து போற்றி
அறப்பயன் விரதங்கள்
யாவினும் தலையாய நோன்பாய்
நினைத்து
கொல்லா விரதத்தை ஏற்று நடுநிலை கொண்டு
வாழ்க
211
இன்றய நாட்கள்
வரை இதயத்தில் இரக்கம்
இன்றி
உயிர்களை வதைத்துக் கொன்று
ஊனினை உண்டு வாழ்ந்து
திருவறம் மனதில்
நீக்கி தீவினைப் பெருகச்
செய்தாய்
அவ்வினை தீர்வதற்கு இனி அகிம்சையே விரதம்
ஆகுமென்றார்
212
நிலையில்லா உடலின்
வாழ்க்கை நிலைத்தது என்று எண்ணி
கொற்றவன் ஆணைபடி கொலைதொழில்
செய்து வந்தாய்
முடிகொண்ட வேந்தனுக்கும்
முடிந்திடும் வாழ்க்கை சிலநாளில்
தீவினை சேர்ந்ததனால் செக்கு
போல் கதிநான்கில் உழல்வோம்
213
ஐயனே ஒன்று கேளாய் சான்று
நான் ஒன்று சொல்வேன்
யசோமதி தந்தை யசோதரன் அவன் தாய் சந்திரமதியும்
மாக்கோழி பலியிட்ட
பாவம் பிறவிதோறும் பின் தொடரந்து
அடைந்திட்ட பெரும் துன்பங்கள்
அளவிட்டு இயம்ப இயலாது
214
பெருகிய தீவினைப்
பயனால் பெருகிடும் துன்பங்கள்
தாங்கி
பல பல பிறவிகள்
எடுத்து விலங்கினில் பிறந்து
சுழன்று
செய்தவினை இன்னும்
துரத்த நீ தாங்கிய
கூண்டு தன்னில்
இரு கோழியாய் பிறப்பில்
உள்ளார் யசோதரனும் சந்திரமதியும்
215
மாவினால் செய்த கோழியில் உயிர் ஒன்று இல்லையாயினும்
உயிர்பலி கொடுக்கும் எண்ணம்
உயிரிடம் கருணை நீங்க
சிந்தையில் உவகைக்
கொண்டு செய்திடும் பாவ பாவனை
மறுமையில் நரகம் சேர்க்கும்
என அருளினார் அகம்பன முனி
216
அகம்பன முனிவர்
கூற்றால் அகம் நடுங்கிய
சண்டகருமன்
செற்றமும் சினமும் நீங்கி திருவறம் மேல் காதல் கொண்டு
இல்லற விரதம்
யாவும் முனிவர் முன் முழுமனதில் ஏற்று
நற்காட்சி அடைந்தேன் என்று அகம்பனரை தொழுது
அகன்றான்
( செற்றம் : வைராக்கிய பகைமை )
217
அகம்பனர் அருளிய
மொழியை அடைபட்ட கோழிகள்
கேட்டன
அறிந்தன அதனதன் பிறப்பை
உணர்ந்தன தம் தீவினையை
சினத்தினை நீக்கின
மனதில் சிந்தையில் அணுவிரதம்
ஏற்றன
நல்லூழின் தன்மை அதனை சொல்லுதல் பெருமையன்றோ
218
அருகனின் திருவடி
வணங்கி அறம் மேல் கொண்ட
ஆசையலே
அகமது குளிர்ந்து மகிழ ஆனந்த கூச்சலில்
கரைய
யசோமதி மன்னன்
நெஞ்சில் அவ்வொலி சினத்தை
எழுப்ப
வில்லினை கரத்தில்
எடுத்து வளைத்திட்டான் அம்பை எய்ய
219
கூர்முனை அம்பினாலே
குரல் வந்த திசையை
நோக்கி
ஒலியினை மனதில் பதித்து
ஒன்றிய குறியினை பார்த்து
அம்பினை எய்ததாலே
அறம் கேட்ட கோழிகள்
இரண்டும்
விரைவினில் உயிரை இழந்து
உயிர் விரைந்தது மனிதகதிக்கு
220
வசந்ததின் மயக்கத்திலே
வண்ணமலர்ச் சோலையிலே
யசோமதியும் புட்பாவலியும் அமர்ந்து
இன்பம் தூய்த்த பின்பு
அரண்மனை அடைந்து
அவர்கள் அகம் தழுவி வாழ்ந்த நாளில்
இரட்டைமகவு பெற்ற பின்னர்
ஓர் ஆண்மகவை பெற்றிட்டார்கள்
221
இரட்டையரில் முன் பிறந்தவனை அபயருசி
என்றழைத்தனர்
அடுத்து பிறந்த பெண்மகவு அபயமதி
என பெயர் கொண்டாள்
அபயருசி அபயமதி
இருவரும் அடியெடுத்து வளரும்
போது
இளங்குமரன் வந்துதித்தான் இயசோதரன்
எனும் பெயரில்
222
அரசன் மகன் யசோதரன் அரச கல்வி பயிலலானான்
குதிரை யானை ஏற்றமதை
குலத்தொழிலாய் கற்கலானான்
எட்டெட்டு கலைகளோடு வாள்போரில்
வல்லவனாய்
நிலம் அதிர ஓடும் தேரின் சூட்சமத்தில்
சூரனானான்
223
நூலினால் அமைத்த
வலையும் நுண்ணிய கருவிகளோடு
நால்வகைப் படைகள் சூழ வேட்டைக்கு பொருள்களோடும்
நடுநிலை நின்று
செய்யும் நமனை ஒத்த
யசோமதி வேந்தன்
வேலாயுதம் கையில் கொண்டு
வேட்டைக்கு விரைந்திட்டான்
224
உயிர்களுக்கு நன்மை செய்யும் திருவறம்
நல்கும் சுதத்தர் முனி
இருவினைகள் அறவே அழிக்கும்
ஆற்றலுடைய சிரேஷ்டர் அவர்
மதகளிறு போல் தனித்து அங்கு பிரதிமா யோகத்தில்
நிற்க
சகுனத்தடை என எண்ணி சினம் கொண்டு
இழிவு செய்தான்
225
வனத்தினில் ஒரு விலங்கும் விழிகளில்
காணவில்லை
வேட்டைக்கு சென்ற வேந்தன்
வேட்டையில் தளர்வு கொண்டான்
வெஞ்சினம் முனிமேல்
கொண்டு வேங்கையாய் திரும்பி
வந்தான்
கொல்லுவேன் முனியை என்று கோபத்தில் இரையலானான்
226
அருள்மழை பொழியும்
நாதன் அறமுனி சுதத்தரின்
மேல்
சினம் மிகு கொண்ட மன்னன்
சிவந்த அவர் மேனி சிதைக்க
வேட்டைக்கு அழைத்து
வந்த வேட்டைநாய் ஐநூறையும்
ஏவினான் முனியின் மேலே இரக்கமே இல்லா மனதால்
227
திருவறப் பெருமைதனை
தினம் உபதேசம் செய்யும்
தவத்தினை மனதில் ஏற்று இருவினைகள் அழித்து
நிற்கும்
முனிவரை அணுக அஞ்சி ஒருவில்
தொலைவில் நிற்க
கருநிற நெஞ்சன் யசோமதி கத்தி
எடுத்தான் முனியை கொல்ல
இது முதல் நான்கு
கவிகளில்
வணிகன் முனிவர் சிறப்பை உரைத்தல் :
வணிகன் முனிவர் சிறப்பை உரைத்தல் :
228
மனமது ஒத்த நண்பன்
மேனியில் இளமை கொண்டோன்
குணத்திலே குன்றை ஒத்தான்
சொல்லிலே வன்மை வாய்ந்தோன்
கல்யாணமித்திரன் எனும் கடும் ஆற்றல்
உடைய வணிகன்
மன்னனின் எதிரில் வந்து மாற்றினான்
மன்னன் செயலை
229
வெற்றியே மாலையாய்
அணிந்த வீரவாள் ஏந்திய
வேந்தே
தருமமாம் பெரிய மலையை தவத்தினால் தாங்கி
நிற்கும்
இல்லறப் பற்றுகளோடு
எண்வினைகள் அறுத்த முனியை
வணங்குதல் முறையை விட்டு
வாளினால் கொல்லல் தகுமோ
230
வான்மழை போல் செல்வமதை வழங்குகின்ற
வள்ளல் வேந்தே
வான்மழையை தரை கொணரும்
வலியதவம் பெற்றவர் இவர்
வாய் திறந்து
அருள் மொழிந்தால் எப்பொருளும்
விருத்தி கொள்ளும்
கெடுக என மனம் நினைத்தால் கெட்டொழியும்
அத்தனையும்
231
வேண்டுதல் வேண்டாமையின்றி வெவ்வினைகள்
வென்ற இவர்
அருள் நிழலை மக்களுக்கு
அளிக்கின்ற விருட்சம் இவர்
அடிபணிந்து தொழுவோர்கள்
அமரலோகம் சென்றடைவர்
வெறுப்புடன் இகழ்வோர்கள் வெந்நரகில்
வீழ்ந்து உழல்வர்
232
விண்ணுலக தேவர் எல்லாம் விரும்பி
வந்து பணிந்திடினும்
உன்னைப் போல் அறமிழந்தோர் ஊறு பல அவர்க்கு
தந்திடினும்
அந்த செயல்கள்
அத்தனையும் அவரவர் தம் வினையென்று
தன் மனதில் நினைக்கின்ற தவத்தரசர்
இம் முனிவர்
233
வெற்றிவேல் கையில்
கொண்ட வேங்கை நிகர் காவலனே
தரணிவாழ் உயிர்கள் எல்லாம் தம் உயிராய்
கொண்ட இவரின்
திருவடிகள் நீ வணங்க உன் தீவினைகள் அகன்று
போகும்
அறம் நினைத்து வணங்கி
நீ ஆன்மநலம் பெறுக என்றான்
234
வணிகனின் சொல்லைக்
கேட்ட அவந்தி மன்னன்
யசோமதி
வாளினை உரையில் இட்டு கடுஞ்சினம் கரையப்பட்டு
புழுதி மிகப் படிந்திருக்கும் கருமுகில்
மேனி கொண்ட
முனிவர் இவர் யாரென்றும்
முனி வணக்கம் வினவு என்றான்
235
கலிங்க நாட்டின்
மன்னன் கங்கை குலத் திலகன் இவர்
வேற்றசர் நெஞ்சினிலே பயத்தை
வேரொடச் செய்த மன்னன்
இவ்வுலக உயர்ந்தோர்
எல்லாம் இவர் அடி தொழுதிடுவார்
சுத்த ஆத்மா கொண்ட சுதத்த மாமுனிவர்
இவர்
இது முதல் ஆறு கவிகளால் வணிகன் அரசனுக்கு முனிவர்
பெருமையை தெரிவிக்கிறான்
236
போகமும் பொருளும்
போகும் பொன்கதிரோன் கண்ட இருளாய்
இளமையும் இன்பம் மறையும்
இடி எழுப்பும் மின்னலை போல்
நிலவுலகில் இருக்கும் அத்தனையும் நிலையாமை
கொண்டதுதான்
வீடு பேறு அடைவதற்கு
துறவு ஒன்றே எனத்துணிந்தான்
237
மணிமுடி துறந்தனன்
மாலைகள் நீக்கினன்
கார்குழல் போக்கினன் காதணி கழற்றினன்
ஆடைகள் அகற்றினன்
அரசியை மறந்தனன்
திகம்பர உருவுடன் திருவறத்
துறவியானான்
238
வானுலக தேவர்களும்
மண்ணுலக மன்னர்களும்
வந்து வணங்குகின்ற வலிய தவ கோலம் பூண்டு
உள்ளத்தில் பற்று நீக்கி உயிர்களிடம்
கருணை கொண்டு
துறவிகளின் நியமப்படி சரியை ஏற்று செல்லலானார்
239
தவத்தினில் மனதை ஊன்றி தலை சிறந்த தபஸியாகி
தாங்கிய தன் திருமேனியை
தன் உடல் இல்லை என்றும்
உடலினை போற்றாதவனாய்
உயிரினில் தீவினை நீக்கி
ஞானமாம் ஒளியைப் பெற்று
மும்மணியை நாளும் அணிந்தான்
240
ஒப்பிலா இவர் தவத்தினாலும் ஓங்கிய
நல் அறத்தினாலும்
ஏவிய நாயகள் எல்லாம்
அவர் முன் எட்டடி தள்ளி நின்றன
கடுந்தவமுனியை நீ கண்டதாலே கொலைவினை
நீங்கி நின்றாய்
தீவினைக் குற்றங்களும் உனை தீண்டாது காத்துக் கொண்டாய்
241
வணிகனின் கூற்றைக்
கேட்டு வேந்தனின் மனதும்
மாற
முனிவரின் அருகில் சென்று
மென்னடியில் சிரசை வைத்து
தான் செய்த பிழைகள் எல்லாம்
தன்னை விட்டு நீங்குதற்கு
தன் சிரம் கொய்து
அவர் திருவடியில் வைக்க எண்ணினான்
242
மன்னனின் மனதின்
ஓட்டம் மாமுனிவர் அறிந்து
கொண்டு
தற்கொலை தடுக்காதாயின் தன்னை அப்பாவம் சேரும் – என
யோகத்தை கலைந்த
முனிவர் மன்னனின் செயலைத்
தடுக்க
வேந்தே உன் எண்ணம்
தனை விரைவினில் விடுவாய்
என்றார்
243
எனைக்கொல்ல வந்த பிழையும்
தற்கொலை என தவறிய பிழையும்
மாபெரும் பிழைகளாகி தீவினையாய்
படிந்திடும் உயிரில்
தன் மனம் எண்ணிய
செயலை தவநெறி முனிவர்
அறிந்து சொல்ல
அரசனும் அவரை வணங்கி
முன்னோர்கள் பிறப்பை கேட்டான்
244
யசோத மன்னனே
கேள் உன் பாட்டன்
அசோக அரசன்
நல்வினைகள் படிந்ததாலும் நற்காட்சி பெற்றதாலும்
பிரம்ம கல்ப தேவனாகி
பத்து கடற்கால வயதில்
தெய்வ மகளீர் பணி செய்ய திகட்டாத இன்பம்
கொண்டான்
245
உன் அன்னை அமிர்தமதி உள்ளத்தில்
கபடத்தால்
கணவனையும் அவன் தாய்யையும் கடும் நஞ்சு இட்டு கொன்று
அட்டபங்கன் பாகனோடு
அழியாகாமத்தால் கலவி கொன்டு
தொழுநோய் உடல் பரவ துஞ்சி ஐந்தாம்
நரகடைந்தாள்
246
உன் தந்தை யசோதரனும் உன் பாட்டி சந்திரமதியும்
சண்டமாரி கோயிலிலே மாக்கோழியை
பலி தந்து
மனதில் உயிர் பலி என்ற மாபெரும் தீவினை பயனினால்
பல பிறவி எடுத்து
இன்று அபயமதி அபயருசி ஆனார்கள்
247
அருந்தவ முனிவர்
சொன்ன அத்தனையும் மன்னன்
கேட்டு
அகமது மிகவும் சோர்ந்து
அஞ்சியே நடுங்கி நின்றான்
தீவினை மனதில்
சேர தினம் பல உயிர்
மடிய
காரணமான நான் கடும் நரகம் செல்வேனோ
என்றான்
248
மாக்கோழி பலியிட்டோர்கள்
மருவின்னர் பல ஜென்மங்களை
உயிர்களை வதைத்த எனக்கு
உரிய துன்பங்கள் என்ன –என
மனமது கலங்கிய
யசோமதி மாமுனிவர் பாதம் தொழுது
அருகனின் அறத்தை அருளி அபயம் அளியுங்கள்
என்றான்
249
மோக மயக்க மனதினாலே முறையற்ற
செயலைச் செய்து
ஆன்மனில் கறையாய் படிந்த
தீவினைகள் கரைந்து போக
ஆகம நெறி விலகாமல் அணுவிரதம்
ஏற்று நடந்தால்
எண்வினை கலந்த உயிரில்
தீவினைகள் உதிர்ந்து போகும்
250
அருள் கொண்ட மனதினாலே அபயதானம்
உயிர்க்கு நல்கி
கொலை களவு காமம் பொய்யை குற்றமாய்
புறத்தே நீக்கி
கடும் பொருள்
பற்று போக்கி காதி இருவினைகள் தள்ளி
திருவறத்தை ஏற்போமாயின் தேவகதி
செல்வது உண்மை
251
சுதத்தமுனி அருளிய
மொழியால் திருவறத்தை மன்னன்
ஏற்றான்
நண்பனை புகழ்ந்து போற்றி
நாட்டோரிடம் தன் பிழைக்கு
வருந்தி
மணிமுடியை மகனுக்கீந்து
மற்ற நாட்டு அரசர்களுடனும்
நண்பனுடனும் மன்னன் ஏற்றான் நல்வினைக்கு
தீட்சை தன்னை
252
தந்தையின் துறவைப்
போற்றி அபயருசி அரசியல்
ஏற்றான்
துறவறம் மேல் கொண்ட காதலால்
தம்பிக்கு அரசைத் தந்தான்
அண்ணனும் தங்கையும்
சேர்ந்து அருகனறம் ஏற்பதற்கு
நாடினார் வனத்தை நோக்கி
சுதத்தரிடம் துறவு தீட்சை
ஏற்க
253
தவவேந்தர் சுதத்தமுனியின் தாள்களை
தாழ்ந்து வணங்கி
செறிதவம் வழியே செல்ல தீட்சையை அருளிட
வேண்ட
தங்கள் ஆற்றலுக்கு
ஏற்றவாறு பதினோறாம் நிலையை
ஏற்று
சுல்லக வேடம் கொண்டு
சரியை மேற்கொள் என்றார்
254
எம் குரு ஆணை ஏற்று சரியைக்கு வந்த எங்களை
தங்களின் ஆணை ஏற்ற சண்டகருமன்
பிடித்து வந்தான்
மாக்கோழி தந்த பலியால் மாளாத துயரில் வெந்தோம்
நீ செய்யும் கொலைகளாலே
உம் நிலை எண்ணி நொந்தோம்
255
அபயருசியின் அருளுரையாலே
மாரிதத்தன் மனது மாறினான்
மங்கையர்கள் தரும் சுகத்தை
மறம் என மனதில்
போக்கினான்
அழித்திடும் தீயென எண்ணி அரசினை
அறவே துறந்தான்
தன் மகன் புட்பதந்தனுக்கு பொன்முடி
சூட்டி நீங்கினான்
256
துறவற தீட்சை
ஏற்க சுதத்த மாமுனியை
நாடி
எட்டங்க தொழுகை செய்து
ஏற்றிட்டான் தீட்சை தன்னை
அருகனின் அறத்தை
ஏற்று ஐம்புலன் அடக்கி
ஆண்டு
மண்ணுலகம் விட்டு நீங்கி
விண்ணுலக தேவன் ஆனான்
257
அண்ணனும் தங்கையுமான
அபயருசி அபயமதியும்
அருந்தவர் சுதத்தமுனியால் தங்களின்
ஆயுள் அறிந்து
நவின்ற நற்குணங்களை
ஏற்று நற்காட்சி நல்லொழக்கத்தலே
ஈசான கல்பலோகத்தில் தேவனாய்
பிறப்பெடுத்தார்கள்
258
பொன்முடி சிரசில்
அமர செவியினில் குண்டலம்
ஒளிர
நவமணி மாலைகள் மார்பில்
நட்சத்திரமாய் ஜொலிக்க
கால்களில் வீரக்கழலும்
கைகளில் அஸ்தகடங்களும்
செவ்விய பல அணிகலங்களுடன்
தேவனாய் பிறந்தனர் அங்கு
259
மலர்மழை இதமாய்
தூவ மாலை இளந்தென்றல்
வீச
தேவதுந்துபிகள் எல்லாம் தேனிசை
மிதமாய் இசைக்க
அளித்திடும் இசைக்கு
ஏற்ப அரம்பையர் நடனம் ஆட
சாமான்ய தேவர்கள் எல்லாம்
திசைதோறும் வந்து வணங்கினர்
260
அருகனின் அறநெறி
எல்லாம் திருவறம் கொண்டதாகும்
அஞ்சிடும் வினைகள் எல்லாம்
அவ்வறம் இனிதே வெல்லும்
ஐம்புலனை அடக்கி
வைக்கும் அழியாத மோட்சம்
தரும்
அத்தனை அறங்களையும் இந்நூலில்
காண்பீராக
யசோதர காவியம்
முற்றும்.
No comments:
Post a Comment