Showing posts with label BAGHAVAN BAHUBALI. Show all posts
Showing posts with label BAGHAVAN BAHUBALI. Show all posts

Sunday, December 29, 2019

GOMMATAGIRI - கோமட்டகிரி

Bhagawan Bahubali -  பகவான் பாகுபலி





Gommatagiri:


Gps coordinates is (12.37062, 76.48741)

Bettadur, Between Mysuru and Madikeri route, at 15 take diversion for 4.5 km spot.


கோமடகிரி:

தலைக்காவிரியிலிருந்து மைசூர்சாலையில் 15 கிமீ. முன்னர் இடதுபுறச்சாலையில் திரும்பி 4.5 கிமீ. பயணித்ததும் கோமடகிரி குன்றின் மீதுள்ள பகவான் பாகுபலியை, நிரந்தர அபிஷேக சாரக்கட்டமைப்பிற்கு முன் கண்டோம்.


அத்தலம் சென்றபோது மிகவும் அமைதி, எங்கும் சந்தடியே இல்லாத காலை 11 மணி. சிறிய குன்றின்மீது நல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. சற்றொப்ப 70 படிகள் உயர்ந்ததும், உயரத்தோற்றத்துடன் நின்ற பகவான் பாகுபலியின் திவ்ய தரிசனம் கிட்டியது.


ஸ்ரவணபெலகொலா, வேனூர், கார்காளா, தர்மஸ்தலா போன்று குன்றின் மீது தியானக் கோலத்தில் தனித்து நின்று கொண்டிருக்கும் பாகுபலியை கோமடகிரியிலும் கண்டபோது கைகள் இரண்டும்  தாமாகவே கூப்பி வணங்கத்துவங்கின.  


அதே  உருட்டையான கம்பீர சரீரம், புற்றிலிருந்து வெளியேறிய பாம்புக்களுக்கிடையே நிற்கும் கால்கள், மாதவிக்கொடிகள் படர்ந்த புஜங்கள், அமைதி தவழும் முகம், மன்மதனும் மயங்கும் அழகுத் தோற்றம், வசீகரிக்கும் பாகுபலியை இங்கு வணங்கினாலும் நம்மை நாம் மறப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. மிகச் சிறியோனாகிய நாம் அந்த பிரம்மாண்டத்தைக் கண்டு வணங்குவதைத்தவிர வேறென்ன செய்ய முடியும்.


சற்று நேரம் அவருக்கெதிரே நின்று கண்களை மூடி தியானம் (என்று ஏதோ) செய்து விட்டு கீழே இறங்கும் போது, வலது புறம் சம்மேதகிரி பாத கூடங்களும், இடது புறம் சமவசரணக் கோவிலும் தென்பட்டன. எதிரில் பிரம்மஸ்தம்பமும், சாலையைக்கடந்து தங்குமிடமும் தென்பட்டன. (அங்கும் யாருமே இல்லை. ஸ்தலத்திற்கு கூட்டத்துடன் செல்லவும்…)



----------------------------------


















In Karnataka, Shravanabelagola is one of the most famous Jain sacred centres. However, there are many Jain religious places which have an interesting history. Gommatagiri in Mysore is one of the Jain religious places in Karnataka known for its history.
We visited this temple on the way from Madikeri to Mysore.
Temple is situated nearly 25 kms from Mysuru. On the national highway it is situated at 4.5 kms distance inside.

Gommatagiri is famous for the statue of Bahubali (Gommateshwara) which is located on a hillock named 'Shravana Gudda'. This 700-year-old granite statue of Gommateshwara belongs to the early Vijayanagara style of architecture.

The Gommateshwara looks similar to the statue in Shravanabelagola. However, this figure of Gommatagiri is much smaller in size when compared to the other. Therefore, Gommatagiri serves as one of the prominent Jain religious places in Karnataka.

The annual Mahamastakabhishekha is also celebrated at Gommatagiri. A structure will be fixed behind the statue where priests will stand and perform the Abhishekha (holy bath) to the idol. Although, it is not as famous as the Shravanabelagola's Mahamastakabhisheka which happens every 12 years. This is one of the big events at Gommatagiri and many people around the state come here to witness this festival. You can see many Jain pilgrims coming here to seek the blessings from Bahubali.



















Actually, there are a few similarities between Gommatagiri and Shravanabelagola. One has to climb a hillock at Shravanabelagola and here also the visitors have to climb up to visit the temple.


The granite statue of Bahubali looks similar to Gommateshwara at Shravanabelagola. However, this statue is small, yet splendid. Unfortunately, this heritage is threatened due to lack of preservation and illegal land activities happening in the area.


Tourists have to climb several stairs to reach the summit. A footprint of Bahubali can be seen up the hill before the temple. As you climb, the statue of Gommateshwara becomes clearer to the vision. He is in the standing posture and emanates a rustic charm. Except for the time of the festival, this place is really calm and peaceful. So, you can enjoy a heritage surrounded by greenery and spend a quality time at this hill.


A Model of Sammed shigari also built with 24+ Tonks with Jinar and saints footprints on scattered granite rocks made the surrounding more sacred divinity. Apart from a Samavasaran miniature structure also constructed here.


Gommatagiri is around 15km from Mysore city. It is situated in a place called Bilikere Hobli at Hunsur Taluk. It is better to go in private vehicle from Mysore




















கர்நாடகாவில் சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட பல சமண மத ஸ்தலங்களும் உள்ளன. மைசூரில் உள்ள கோமதகிரி(கோமடகிரி) கர்நாடகாவின் சமண புனித ஸ்தலங்களில் ஒன்றாகும்.


கோமதகிரி மைசூர் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. 'ஷ்ரவணா குடா' என்ற குன்றின் மீது அமைந்துள்ள பாகுபலி (கோமதேஸ்வரா) சிலை மிகவும் பிரபலமானது. 700 ஆண்டுகள் பழமையான இந்த கோமடேஸ்வராவின் கிரானைட் சிலை ஆரம்பகால விஜயநகர பாணி கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது.


கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதியில் நிறைய ஜைனக் குடும்பங்கள் வாழ்ந்துள்ள தாக தெரிகிறது. சென்ற நூற்றாண்டில் (1948 ல்) தான் இந்த குன்றில் மீது பல செடிகளுக்கும், முட்புதர்களுக்குமிடையே கோமதீஸ்வரரின் அழகான உருவம் தரிசனத்திற்கு கிட்டியுள்ளது.


16 அடி உயரமுள்ள ஸ்ரீ கோமதீஸ்வரர், ஒற்றைப் சிலைக்கு புகழ் பெற்றது. இந்த கிரானைட் சிலை ஸ்ரவணபெலகோலாவில் உள்ள கோமட்ட சாமுண்டராயன் வடித்த சிலைக்கு ஒத்ததாக காட்டியளிக்கிறது. இருப்பினும், இந்த கோமதகிரி பாகுபலி சிலை மற்றவற்றுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாக இருக்கிறது.


சிலையின் இருபுறமும் புற்றுக்களிலிருந்து வெளிவந்த பாம்புகள் மிகவும் கவர்ச்சிகரமானவை மற்றும் மாதவிக்கொடிகள் தோள்கள் வரை படந்திருப்பது தனித்துவமானவை. இங்கு காணப்படும் கோமதீஸ்வர சிலையின் தொன்மையைப் பற்றிய விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், செங்கல்வராயன் மற்றும் கொங்கல்வராயன் காலத்தில் இந்த புனித ஸ்தலம் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.


பாஹுபலியின் கிரானைட் சிலை ஸ்ரவனபெலகோலாவில் உள்ள 58 அடியுயர கோமதேஸ்வராவைப் போலவே, 16(/18) அடியுயர இந்த சிலை சிறியதானாலும் அற்புதமானது. துரதிர்ஷ்டவசமாக, இந்த பாரம்பரியம் பாதுகாப்பின்மை மற்றும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக அச்சுறுத்தலில் உள்ளதாக தெரிகிறது.


உச்சிமுகட்டை அடைய சுற்றுலா பயணிகள் 72 படிக்கட்டுகளில் ஏற வேண்டும். பாஹுபலியின் பாதம் கோயிலுக்கு முன்னால் மலையின் மேலே காணப்படுகிறது. அவர் நிற்கும் தோரணையில் நின்று ஒரு பழமையான கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். திருவிழாவின் நேரத்தைத் தவிர, மற்ற வேளையில் இந்த இடம் உண்மையில் அமைதியாக இருக்கிறது. எனவே, நீங்கள் பசுமையால் சூழப்பட்ட ஒரு பாரம்பரியத்தை அனுபவிக்க முடிகிறது. ஆம் இந்த மலையில் தனிமையில் ஒரு ரம்மியமான நேரத்தை செலவிடலாம்.




















அதன் அடிவாரத்தில் இடதுபுறம் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் பாதகூடங்கள் சம்மேத கிரியை நினைவுகூறுவது போன்றளவில் மாதிரி வடிவம் ஒன்றை இயற்கையாய் இறைந்துள்ள பாறைகளில் அமைத்துள்ளனர். இது மேலும் கூடுதல் அழகை தருகிறது. அந்த டோங்குகளில் உள்ள பாதங்களை ஏற்ற இறக்கத்தில் நடந்து சென்று தரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது பெரும் பாக்கியமே.


அருகில் பாவாபுரி ஜலமந்திர் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் வலதுபுறம் சமவசரணக் கோவில் ஒன்றும் உருவாக்கியுள்ளனர். அந்த கோமதீஸ்வரர் சிலைக்குன்றிற்கு எதிரில் ஒரு பிரம்ம ஸ்தமபமும் 20 அடியுயரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.


முதல் மஹாமஸ்தாபிஷேகம் 1950 ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. சென்ற ஆண்டு இச்சிலைக்கு வழமைபோல் மஹாமஸ்தாபிஷேகம் நிறைவேறியுள்ளதை செய்திகள் மூலம் அறிந்திருக்கலாம். இந்த கோமதகிரியைப் பொருத்த மட்டில் இது ஒரு பெரிய நிகழ்வாகும், இந்த விழாவைக் காண பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பலர் இங்கு வந்து குவிகிறார்கள். பாகுபலியிடமிருந்து அருளைப் பெற்று மனநிறைவுடன் செல்கிறார்கள்.


இங்குள்ள யாத்ரி நிவாஸ் சரியாக பராமரிப்பில் இல்லாததால், அருகில் 23 கிமீ. தொலைவிலுள்ள மைசூரில் தங்கிச் சென்று தரிசனம் செய்யலாம்.

Monday, September 3, 2018

Dharmasthala Jain temple


Shri Bhagawan Bahubali Jinalayaஸ்ரீ பகவான் பாகுபலி  ஜினாலயம்



It lies on the google map with coordination of (12.95264, 75.37911) 





12.15 மணியளவில் தர்மஸ்தலா வந்தடைந்தோம்.
தெய்வ நம்பிக்கைகள் சங்கமிக்கும் தர்ம உறைவிடம் தர்மஸ்தலமாகும். பல்லாண்டுகளாக பக்தி மரபினை வளர்த்து வரும் பூமியாகும். 

பல பக்தர்கள் பேருந்து, கார், வேன் என பல வாகனங்களில் வந்து சென்றவண்ணம் இருந்தனர்.

சிறிய குன்றின் மீதிருந்த பாகுபலி நாதரை தரிசிக்க வான் மேலேறியது. மேற் சென்றதும், சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வந்ததால் சிறிய வளைவு, நுழைவாயில் கூடம் நடைபாதை ஒழுங்கு போன்றவை புதியதாக காட்சியளித்தன. அவற்றை நின்று காணம் போதே நெடிய 39 அடி உச்சிவரை தெரியும் ஒரே கல்லினால் ஆன பாகுபலி பகவானின் தோற்றத்தின் அருகே அழைத்துச் சென்று கொண்டிருந்தது.


பெரிய பீடத்தின் மீது ஏறிச் செல்ல இரு யானைச் சிலைகள் படிக்கட்டுகளுடன் அழைத்தது. மேற்சென்றால் 13 அடிமேடையில் பாகுபலிநாதர் வேனுர் சிலையின் அதேவகைக் கல்லால் ஆனது போன்ற வண்ணத்தில், ரேகையில் சற்று உருவ  அமைப்பில் மாற்றத்துடன் காணப்பட்டது.


சரவண பெளிகுளம், கார்காளா, வேனூர், தர்மஸ்தலா (கோமட்டகிரி செல்லவில்லை) பாகுபலி பகவானின் உருவச்சிலைகள் இருந்தாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று தனித்துவமாக அமைக்கப்பட்டிருப்பதை மனம் வேறுபடுத்திக்  காட்டத்தான் செய்கிறது. என்ன இருந்தாலும் கோமட்டன் உருவாக்கிய சிலை, முன்னனி வசிப்பதற்கான கூறுகளை வித்தியாசப்படுத்தி மனம் காட்டினாலும்; நான்கு சிலைகளிடத்திலுமுள்ள பேரழகு, பிரம்மாண்டம் இவற்றை வியந்து அண்ணாந்து பார்க்கும்போது நம் அனைவரின் படிப்பு, பலம், பெருமை, புகழ், உயர்வு, அழகு, அதிகாரம், ஆர்ப்பாட்டம் அனைத்தையும் சற்று நேரத்தில் மறக்கடித்து கைகூப்பி வணங்க வைத்து விடுவதென்னவோ உண்மைதான். அவ்விடத்திலேயே நின்று கொண்டேயிருந்தால் அவை முழுவதும் அற்றுப் போய்விடும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


சற்று நேர தரிசனத்திற்கு பின் அடுத்த ஸ்தலம் நினைவுக்கு வர அவரைவிட்டு பிரியும் வேளை வந்தது.  இக்குன்றிலிருந்து மாற்றுப்பாதையில் இறங்கியதும் ஸ்ரீ மஞ்சுநாதர்  ஆலய வழிக்கு இணையான சாலையில் பயணிக்கும் போது ஸ்ரீ சந்திரநாத ஸ்வாமி பஸ்தி என்ற அடையாள குறியீட்டு பலகையைக் கண்டு, அத்திசையில் 1 கி.மீ. பயணித்ததும் அவ்வாலயத்தை சென்றடைந்தோம்.






 The confluence of faiths makes Dharmasthala, the abode of dharma, a unique legacy entrenched over the years. The centuries old Shri Chandranatha Swamy Basadi at Dharmasthala has been maintained in the pristine condition and is amongst the one of the most revered and celebrated Digambara shrines in South India.


The growing fame of Dharmasthala Shri Manjunatha Swamy temple has often obscured the fact that for centuries that Dharmasthala is also a revered Jain Basadi. With the novel thought of protecting the Jain legacy, a pious and methodical renovation of the temple in May 2001 by Shri Veerendra Heggade has made Shri Chandranatha Swamy Basadi, one of the most beautiful edifices in Dharmasthala and the south of India. Standing against the azure blue sky and the lush foliage around it, this temple clad in white marble is a sight to behold and to cherish, imbibe and nurture the teachings about our mortal life by Shri Chandranatha Swamy, Jain Theerthankara Mahaveer and his disciples.
----------------------------------------------- 
In 1973 a statue of Lord Bahubali, carved out of a single rock, was installed at Dharmasthala on a low hill near the Manjunatha temple. It is about 39 feet high with a pedestal of 13 feet and weighs about 175 tonnes. This is one of the five stone statues of Bahubali in Karnataka.

Shri Bhagwan Bahubali Digambar Jain Statue is installed in many places across India(there are 5 monolithic Gommateshwara statue in Karnataka measuring more than 6 m (20 feet) in height), Dharmasthala, being one of them. Dharmasthala is an Indian temple town, known for its religious tolerance and justice. Among the piety and frolic of this beautiful temple town, the statue stands on a low hill, at a kilometer from the Lord Shiva temple, also known as the Manjunath temple. This 39 feet(12 m) statue was sculpted in 1973, by the famed sculptor Renjala Gopalkrishna Shenoy under the aegis of Shri Ratnavarma Heggade. After Shri Ratnavarma Heggade died, the statue was then positioned atop the Ratnagiri Hill in February 1982 by Dr.D.Veerendra Heggade. The Gomateshwara Bahubali Statue is a monolith structure, and is one of the five stone statues of Bahubali located in Karnataka.

********************************

Shri Chandranathaswamy Jinalaya - ஸ்ரீ சந்திரநாத ஸ்வாமி ஜினாலயம்







It lies on the google map with coordination of  (12.94761, 75.38326) 


ஜினாயவளாகம் என்பதை அங்குள்ள அமைதி, ஆரவாரமற்ற தன்மை, ஜன நெருக்கடியற்ற பாதை, படிகள் அனைத்தும் ஒருங்கே சுட்டிக் காட்டி விடுகின்றன. ஏனெனில் மூலவரின் முகம் அமைதியும், சாந்தமும், புன்னகையும் நிறைந்த வடிவமாயிற்றே; அதனை அச்சூழலும் நிரூபித்துக் கொண்டிருப்பதை எத்தலத்திலும் உணரலாம்.

அப்புனிதபூமியில் நூற்றாண்டினைக் கடந்து நிற்கும் ஸ்ரீ சந்திரநாத பஸ்தி அசையாமல் தங்கியுள்ளது. நீலவண்ண வானமும், தழைத்து நிற்கும் பசுமைகளுக்கிடையே ஜைன திகம்பர மரபினை வளர்த்து வருவதற்காக இஜ்ஜினாலயத்தினை கவனமுடன் பாதுகாத்து வருகின்றனர்.

புகழ்பெருகி வளர்ந்து வரும் ஸ்ரீமஞ்சுநாதஸ்வாமி ஆலயத்திற்கிடையே பல நூற்றாண்டுகளாக இந்த ஜைன பஸ்தியும் வளர்ச்சியடைந்து தான் வந்திருக்கிறது. மே மாதம் 2001 ம் ஆண்டு தர்மாதிகாரி ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே அவர்களால் ஜைன மரபும், பக்திமார்க்கமும் பெருகும் வகையில் ஸ்ரீ சந்திரநாதஸ்வாமி ஜினாலயத்தை அழகான கட்டமைப்பாக மாற்றம் செய்து புனருத்தாரணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிலுள்ள பல அழகிய ஜினாலய கட்டமைப்புகளில் ஒன்றான தோற்றத்தினைக் கொண்டுள்ளது. அனைத்தும் சரியான அளவில், பொலிவான தோற்றத்தில் இருந்தாலும், இவ்வாலத்தினை புகைப்படம் எடுக்க அனுமதி யில்லை.

வெள்ளைச் சலவைக்கல்லால் உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பு வரும் பக்தர்களின் மனதிற்குள் ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் போதனைகளை நுழைத்து, வளரச் செய்து நல்வாழ்வுக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதே இவ்வாலத்தின் நோக்கமாக இருக்கும் என்றால் மிகையாகாது.

மஹாவீரரின் தென்னக விஜயத்திற்கு பின்னர் ஜைனம் வளர்ந்து மேனிலை அடைவதை இத்தலத்தின் ஜினாலயம் நிரூபித்து நிற்கிறது.

மூலவராக ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் சலவைக்கல் சிலை பிரதிஷ்டை  செய்யப்பட்டு, சுகநாசியில் பல உலோகச்சிலைகள் அமர்த்தப்பட்டிருப்பதை, நவரங்க  மண்டபத்திலிருந்து கண்டு தரிசனம் செய்ய வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபம் சற்று நீண்ட ஆளோடியுடன் இணைக்கப்பட்டு அதன் தூண்களில் பல சமவசரண தேவதேவியரின் சிற்பங்களைச் செதுக்கி வைத்திருப்பது கலைப்பொக்கிஷமாக காட்சி யளிக்கிறது. சற்று நேரம் அமர்ந்து செல்ல எண்ணும் படியான சூழலை ஏற்படுத்தியிருப்பது இவ்வாலய வரைபட, கட்டுமானத்தின் சிறப்பாகும்.
----------------------------------------------- 
அங்கு ஜைன போஜன் சாலைக்கான வழிமாற்றம் புரியவில்லை. மதிய சாப்பாட்டு  நேரம் கடந்து பசிபெருகி காதை அடைக்க துவங்கியதால், அன்னபுரணி போஜன் சாலையில் தாவர உணவுதான் என கூறியதால்,  அங்கு நின்ற வரிசையில்  சென்று தரைமேடையில் அமர்ந்தோம்.

சில நொடியில் தையிலை, நீர், இனிப்பு, சாதம், ரசம், சாப்பிட்டு  முடிப்பதற்குள் சாம்பார் (மாறித்தான் வந்தது), நீர், சாதம், மோர் என உடனுக்குடன் வந்து திணற வைத்தனர். ஏழு நிமிடத்தில் முடிக்க வைத்தது விந்தையாக இருந்தது. (இலையில் பெற்றுக் கொள்ள தாமதமானால் வாயில் திணித்து விடுவார்கள் போலிருந்தது.)  வேறு வழியில்லை பல்லாயிரக்கணக்கான ஜனக்கூட்டம் தரிசன வரிசைவேலிக்குள்ளும், உணவருந்தும் கூடத்திலும் வந்தவண்ணம் இருந்தனர். தனிக்கவனிப்புக்கு நொடிப்பொழுதுகூட ஒதுக்க வழியில்லை.

வயிறு நிரம்பியதில் மகிழ்ச்சியே..

திடீரென அங்கிருந்து மைசூர் சென்று கனககிரி தரிசனம் காணலாம் என மேலும் ஒரு ஸ்தலத்தை பயணத்திட்டத்தில் நுழைத்தோம்.

சுப்ரமண்யா சென்று,  மைசூர் சாலையில் பயணத்தபோது, நிலச்சரிவினால் அச்சாலை அடைபட்டது  என்றனர். மாற்று வழி ஷக்லேஷ்வர், ஹாசன், மைசூர் என பயண நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டபோது  தெரிந்தது.  இந்த 16 கி.மீ. பயணம் வீண், வேறு வழியில்லாமல் மைசூர் பயணம் சுற்றுப்பாதையில் தொடர்ந்தது.


ஹாசனுக்கு முன்பே வலதுபுறம் திரும்பிச் புறவழிச்சாலையில் சென்றதால் எங்கும் சிற்றுண்டிச்சாலையே தென்படவில்லை.  அப்படியே இருந்தாலும் மாமிசஉணவுச்சாலை பெயர்ப்பலகைகள்.  மைசூர் புறநகருக்கருகே வந்தடைந்து விட்டோம். இரவு 10.15 மணி, வெஜ்  ஹோட்டல் என்ற ஆங்கில பெயர்ப்பலகை தென்பட்டது.  அந்த அகால நேரத்திலும், விரும்பிக்கேட்ட டிபன் உணவு  கிடைத்தது.  மனமார்ந்த நன்றியை ஊழியருக்கு  தெரிவித்து  விட்டு, மைசூர் எல்லையில் ஒரு தங்கும் விடுதியில்  இரு  அறைகள் எடுத்து உறங்க துவங்கும்  போது நடுஇரவு 11.45 மணி….























The confluence of faiths makes Dharmasthala, the abode of dharma, a unique legacy entrenched over the years. The centuries old Shri Chandranatha Swamy Basadi at Dharmasthala has been maintained in the pristine condition and is amongst the one of the most revered and celebrated Digambara shrines in South India.



The growing fame of Dharmasthala Shri Manjunatha Swamy temple has often obscured the fact that for centuries that Dharmasthala is also a revered Jain Basadi. With the novel thought of protecting the Jain legacy, a pious and methodical renovation of the temple in May 2001 by Shri Veerendra Heggade has made Shri Chandranatha Swamy Basadi, one of the most beautiful edifices in Dharmasthala and the south of India. Standing against the azure blue sky and the lush foliage around it, this temple clad in white marble is a sight to behold and to cherish, imbibe and nurture the teachings about our mortal life by Shri Chandranatha Swamy, Jain Theerthankara Mahaveer and his disciples.