Tuesday, March 17, 2015

THIYAGADURGAM - தியாகதுர்க்கம்

Shri ARUGAR CAVERN TEMPLE  -  ஸ்ரீஅருகர் குகைக் கோவில்





Location:

lies on the Google map in the coordination of (11.73716, 79.07443) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click for THIYAGADURGAM
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  THIYAGADURGAM கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-

Tindivanam → Ulundurpet →  Kallakurichi road → Thiyagadurgam   = 108 kms.

Vandavasi → Tindivanam → Ulundurpet →  Kallakurichi road → Thiyagadurgam   = 139 kms.

Tiruvannamalai  → Tirukovilur →  Kallakurichi road → Thiyagadurgam  = 62 kms.

Tiruchy  → Chennai highway → Asanur → Elavasanur → Kallakurichi road → Thiyagadurgam  = 138 kms.

Thanjavur → Kumbakonam → Ulundurpet →  Kallakurichi road → Thiyagadurgam   = 150 kms.


செல்வழி:-

திண்டிவனம் → உளுந்தூர்பேட்டை → கள்ளக்குறிச்சி → தியாகதுர்க்கம் = 108 கி.மீ.

வந்தவாசி  → திண்டிவனம் → உளுந்தூர்பேட்டை → கள்ளக்குறிச்சி → தியாகதுர்க்கம் = 141 கி.மீ.

திருச்சி → சென்னை சாலை → அசனூர்→ எளவனாசூர் → தியாகதுர்க்கம்  = 138 கி.மீ.

திருவண்ணாமலை  → திருக்கோவிலூர் → உளுந்தூர்பேட்டை சாலை → கள்ளக்குறிச்சி → தியாகதுர்க்கம் = 62 கி.மீ.

தஞ்சாவூர் → கும்பகோணம் → உளுந்தூர்பேட்டை சாலை → கள்ளக்குறிச்சி → தியாகதுர்க்கம் = 150 கி.மீ.






யேமீசம் ப்ரதிகால பவ்ய ஜநதா
திருஷ்ட்வா மரேந்த்ரைர் முதா
கல்யாணே வ்ர­பாதயோ ஜினவரான்
சம்பூஜிதா ஸ்தாநிஹ
த்ரைலோக்யாதிபதி ந்யஜா ம்யதிசயோ
மேதான் சதுர்விமசதிம்
சாந்த்யர்த்தம் ஜகதாம் சராசரகுரும்
திர்த்தங்கரான் சாம்ப்ரதம்.
----

   நிலவுல கெழுந்த  நீதியினை அளித்த  
  அலகில் பெருங்குணத்து ஆதிஇடபன்  
  விஜயவீரன் அஜித பட்டாரகன்  
  அம்பவழ மேனிச் சம்பவநாதன்  
  அரத்தகு சேவடி அபிநந்தநனும்  
  உரைத்தகு மேனி உத்தமசரீரன்  
  தொலையா வாய்மைச் சுமதி பட்டாரகன்  
  பரம மூர்த்தி பத்மபிரபனும்  
  ஏர்பெறு காட்சி சுபாரீசநாதன்  
  சந்திரவீறொளி சந்திரபிரபன்  
  புரையறு தவத்துப் புஷ்பதந்தன்  
  சிங்கம்ஏந்து அணைச் சீதளநாதன்  
  திருமறு மார்பிற் திகழ் சிரேயாம்சன்  
  மலர்மிசை நடந்த வாசுபூஜ்சியன்  
  மேமல் மேனி விமலபட்டாரகன்  
  அருள்நெறி யளித்த அனந்த சித்தன்  
  தருமலை உடைய தருமபட்டாரகன்  
  தவநெறி யளித்த சாந்திபட்டாரகன்  
  கொந்தார்மலர்மழை குந்து பட்டாரகன்  
  அந்தர வினையின் அரபட்டாரகன்  
  தொல்லை வினை கெடுத்த மல்லிபட்டாரகன்  
  முகடுபெற  வுயர்ந்த முனிசுவிரதர்  
  அரிட்ட நெறியின் நமிபட்டாரகர்  
  அஷ்டவினை கெடுத்த அரிட்ட நேமி  
  பட்ட வினைபகல் பாரிஸநாதன்  
  சித்தர்கள் ஏத்தும் ஸ்ரீவர்த்தமானன்  
  என்றிவர் இருபத்து நால்வரையும்  
  நாளும் நாளும் நலம் புகழ்ந்தேத்த  
  மீளா உலகம் வேண்டுதற் பொருட்டே!!  



தியாகதுர்க்கம் என்னும் பஞ்சாயத்து நகரம் கள்ளக்குறிச்சிக்கு அருகில், உளுந்தூர்பேட்டையிலிருந்து 23 கி.மீ . தூரத்தில் அமைந்துள்ளது. அவ்வூரின் நடுவே உள்ள சிறிய மலைத் தொடருக்கு அப்பெயர் உள்ளது. அதிக உயரம் இல்லையானாலும் நிறைய பாறைகளைக் கொண்டுள்ளது. அதன்  நடுவே உள்ள பெரிய பாறையின் கீழ் உள்ள குகையில் 5ம் நூற்றாண்டிலிருந்து சமண துறவிகள் வாழந்துள்ளனர். அதன் பின்னர் அக்குகையில் இரண்டு கற்பலகைகளில் ஜினரின் வடிவமும், தர்மதேவியின் வடிவமும் செதுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதனால் அவ்வூரில் பல சமண இல்லறத்தார்கள் வாழந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. ஆனால் தற்போது ஒரு சமணர் கூட இல்லை. இருப்பினும் அச்சிலைகள் பழமையுடன் உருவம் மாற்றப்படாமல் அதன் கீழ் வாழும் இந்துக்களால் வழிபாடு தினமும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்குகைக் கோவிலுக்கு செல்ல கைப்பிடிச் சுவற்றுடன் அகலமான படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு அருள்மிகு மாமலை அம்மன்  கோவில் என்ற பெயரில் (ஸ்ரீசாமிநாத குருக்கள் உதவியுடன்) அனைவராலும் துர்க்கையைப் போன்று வணங்கப்படுகிறது.  மேலும் கீழ் பகுதியில் ஸ்ரீபிள்ளையார், ஸ்ரீஐயப்பன் போன்ற தெய்வங்களுக்கான சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ள தீர்த்தங்கரர் சிலை நீண்ட முக்கோண வடிவில் சிங்காதனம், இருபுறமும் கோட்டுறுவில் சாமரம், தலைக்கு பின்புறம் பிரபை ஜ்வாலைகளுடன் (சற்று வித்தியாசமாக), முக்குடையுடன் செதுக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பைக் காணும் போது பல்லவர் காலத்தில் உள்ள கலைப்பாணியை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் எந்த லாஞ்சனமும் பொறிக்கப்பட வில்லை. அதனால் 6, 7ம் நூற்றாண்டைச் சார்ந்திருக்க வாய்ப்புள்ளது. 

Thiyagadurgam a panchayat town near to Kallakurichi  and 23 Kms from Ulundurpet in Villupuram district. At the centre of the town a small range of mountain called as Thiyadurgam range. Moreover it is in small range but it has more rocks.  At the moderate height and beneath of a huge rock a natural cavern with canopied by another rock. Before 7th Century AD Jain saints had been living there.  In the 9th Century AD a Thirthangar idol and shri Kooshmandini idol were installed by the living Jains during the period. Now no jains are there. But the hindus in the town, worshipping the idols without making any changes on its original carvings. Daily poojas and offerings are made with help of Hindu priest (Mr.Saminatha kurukkal). Broad and paved foot steps with hand walls are constructed to reach the cavern temple with the donations offered by the local devotees. They called as Mamalai Amman temple, which has two shrines on the way to reach, one is Shri Vinayagar and Shri Ayyappan is another.

The no lanchan Jinar statue was carved on a stretched triangular shape granite stone. It got singathana at the bottom with lotus podium, two whisks deep-drawings, Prabha with burns and tri-umbrella above the head. The design belongs to 6-7th century AD fashion because no ornamental designs on it.



ஸ்ரீதர்மதேவி அம்மன் சிலை மூன்று வளைவுகளுடன் நின்ற நிலையில் கற்பலகையில் வடிக்கப்பட்டுள்ளது. அழகிய உருவம் கொண்ட அம்மன் அதிக ஆபரணங்கள் இன்றி கிரீடம், காது குண்டலங்கள், கழுத்து ஆபரணம், வளை, தண்டையுடன் எளிமையாக காணப்படுவதால் இச்சிலையும் அதே காலத்தில் வடிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் அச்சிலையின்  பின்புறம் கமுகமரமும், அருகே இரண்டு குழந்தைகளும் மேலும் பணிப்பெண் ஒருத்தியும் செதுக்கப்பட்டுள்ளது. அதனால் தர்மதேவி என அடையாளம் காணலாம். மேலும் அன்னத்தை பெறுவதைப்போன்ற ஒரு  ஆண் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. அதனால் பலரும் அன்னப்பூரணி என்றும் அழைக்கின்றனர். அவ்வடிவம்  மிகவும்  தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது 

பலரும் வந்து தினமும் வழிபாடு செய்வதால் அக்குகைக்கு சுவர்கள் எழுப்பி உள்ளே சுவர் ஓடுகள் ஒட்டப்பட்டு, வெளியே பாதுகாப்பு கதவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. வெளியே இரண்டு வாயிற் தேவதைகளின் தற்காலத்தைய சுதை சிற்பங்கள் அழகுடன் அமைக்கப்பட்டு காட்சி தருகிறது.

அனைத்து சமணர்களும் அவசியம் சென்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் இந்துக்களால் வழிபாடு செய்யப்படும் அச் சமண சின்னங்களை தரிசித்து வரவேண்டுகிறேன்.

தொடர்புக்கு: ஸ்ரீசாமினாத குருக்கள் - +91 75026 71301




Another Shri Kooshmandini having three bends on its standing posture. A simple crown, ear studs, close neck ornament, bangles and thandai were carved. It also influences the same period  design. Apart from two girl children, one servant maid and arecanut tree on the back witnessed as Shri Dharmadevi. Additionally a male figure with food vessel also engraved on it. So they calling as Annapoorani matha. (The male figure carving is missing afterwards.)

Inside the cavern glazed tiles are paved on the walls and floorings. It secured tightly by tow iron  grill gates. Either side of the entry two demi-goddess statue are exhibits in standing posture. Regular poojas are conducted with help of the devotees in the surroundings.

Every Jains must visit the place for worshipping the legend jain idols with out alterations.

Contact no. Mr.Saminatha kurukkal - +91 75026 71301.








CUDDALORE - கடலூர்


Shri ADHINATHAR  JAIN TEMPLE  -   ஸ்ரீ ஆதிநாதர்  ஜிநாலயம்



Location:

lies on the Google map in the coordination of (11.72101, 79.77063) ie put the latitude, Longitude on the search box



Map for Jain pilgrimage centres:   Click CUDDALORE
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கடலூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:-

Tindivanam → Pudhuchery → cuddalore   = 65 kms.

Vandavasi → Tindivanam → Pudhuchery → cuddalore   = 101 kms.

Tiruvannamalai  → Tirukovilur → Panruti → cuddalore  = 107 kms.

Tiruchy  → Madapattu → Panruti → cuddalore   = 184 kms.


Gingee → Tindivanam → Pudhuchery → cuddalore   = 97 kms.


செல்வழி:-

திண்டிவனம் → புதுச்சேரி → கடலூர் = 65 கி.மீ.

வந்தவாசி  → திண்டிவனம் → புதுச்சேரி → கடலூர் = 101 கி.மீ.

திருச்சி → மடப்பட்டு → பண்ருட்டி → கடலூர் → கோலியனூர் = 184 கி.மீ.

திருவண்ணாமலை  → திருக்கோவிலூர் → மடப்பட்டு → பண்ருட்டி → கடலூர் = 107 கி.மீ.


செஞ்சி → திண்டிவனம் → புதுச்சேரி → கடலூர் = 97 கி.மீ.





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



கடலூர் என்னும் சமண திருத்தலம் வங்காள விரிகுடா கடலின் ஒரு துறைமுகத்தில் அமைந்துள்ளது.  1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த தருமசேனர் என்னும் சமண துறவியை திருவாவுக்கரசராக அறிந்திருப்போம். அவர் ஆரம்ப காலத்தில் திருப்பாதிரிபுலியூரில் அதாவது பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் உள்ள சமணப் பள்ளியில், சைவ மதத்தில் பிறந்திருந்தாலும் திருமண வாழ்வில் உள்ள துன்பங்களை களையும் பொருட்டு தன்னை ஐக்கிய படுத்தியுள்ளார். அங்கு ஆகமங்கள் பல கற்று துறவு நெறியில் பல ஆண்டுகள் வாழ்ந்து பெளத்த மதத்தினரோடு வாதப் போரில் வென்று இருள்நீக்கியாராய் இருந்தவர் தருமசேனராக (சேன கணத்தில் ஒருவராக) அழைக்கப்பட்டார் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரித்திர உண்மை. அவ்வாறெனில் அக்காலத்திற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாய் அங்கு சமணம் தழைத்தோங்கி இருந்தது தெளிவாகும்.  அதன் பல அடையாளங்கள் தற்போதும் அதனைச் சுற்றி ஆய்வு செய்பவர்களுக்கு கிடைத்துக் கொண்டே உள்ளது. தருமசேனர் அப்பராக அவருடைய தமக்கையால் மாறிய பின்னர் சைவ மதம் அவரால் அப்போது ஆண்ட  அரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பல சமண அடையாளங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீஆதிநாதரின் கட்காசன நிலையில் வடிக்கப்பட்ட தொன்மையான ஒரு கற்சிலையை மூலவராக கொண்ட ஒரு ஜிநாலயம் கடலூர் துறைமுகத்திற்கு அருகே  19ம் நூற்றாண்டில் முற்காலத்தின் நெருக்கடிகளில் மதம் மாறாத பழைய பரம்பரையைச்  சேர்ந்த விரு­ப நைனார் குமாரர் விஜயபால நைனாரால் அப்போதைய வெள்ளைக்கார ஆட்சியாளரிடம் ஆலய இடம் ஒதுக்கியமைக்கான உரிமையை பெற்று கட்டப்பட்டது.


நடுத்தர அளவில் அமைந்த அவ்வாலயம் தமிழக ஜிநாலயங்களின் அனைத்து அம்சங்களும் பெற்று திகழ்கிறது. கீழ் நோக்கிய ஜிநாலயம் கருவறை வேதிகையில் கருங்கல் பலகையில் நின்ற கோலத்தில் முழுஉருவ சிலையாக தலையில் சுருள் முடிகளுடன் (புதல்வர் பாகுபலியின் தோற்றத்தில்) வடிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. அதன்  பீடத்தில் அதிநாத ஜிநரின் நான்கு க்ஷேத்ரபாலகர்கள் உருவங்களும், யக்ஷன் உருவங்களும், நான்கு சிங்கங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் வேலைப்பாடுகள் கி.பி. 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். பூமிக்கு அடியிலிருந்து 1860 ல் தோண்டி எடுக்கப்பட்டது  ஆகும். (மேலும் அதிக அடையாளங்கள் புதையுண்டு கிடப்பதை அகழ்வாராய்ச்சி செய்தால் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.)   



Cuddalore is a port town of Bay of Bengal sea in Tamil nadu. More than 1500 years back Dharumasenar alias Thirunavukararasar a saint had been living and adorning Jainism. Though he was born in Shaiva family but he adapt the Jain philosophy and learnt the scriptures by joining in a Jain Palli (mutt) at Thirupathiripuliyur ie ancient Padaliputhram. He was praised by other saint of the mutt. He won the Buddist by attending a debate and became called as Dharumasenar, title given by the Jain palli. After re-adaption of Shaivam by Dharmasenar, the Jainism was averted and punished the Jains by the ruler of that time. So we concluded the Jainism was glory during and before. The remnants of Jain monuments are abondan in the area, were identified by the researchers. If the excavation takes place in the area we will got more Jain vestiges.

After getting the permission for the site from the then Collector in 1881 AD by Shri Vijayabala nainar s/o Shri Virushaba nainar, a descendant of Jain origin, unearthed, Shri Adhinathar fully carved granite Statue in a standing posture, belongs to 6th century BC,  was installed in a new Jinalaya near the port.

The medium sized layout Jinalaya got Dravidian styled structures. The Rishbadev, Moolavar stone idol comprises with curled hair (like his son Shri Bahubali) was established on a plinth. Four Kshetrabalagar, four side entry security guards of samavasarn, two Yakshas and four lions are engraved at the bottom of podium. The designs were influenced the art of 6th century BC. It was unearthed in 1860 at nearby place.




அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் உலோகச் சிலைகள் ஏறு வரிசையில் மாடங்கள் அமைத்தும்இருபுற மேடை மீதும் அழகாக அமர்த்தப்பட்டுள்ளன.  தின பூஜைக்கான சிலைகள் கருவறை மேடையில் ஒருபுறம் வைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து முக மண்டபமும் திருச்சுற்றும் அமைக்கப்பட்டுள்ளன. கர்ப்பக் கிருஹத்தின் மேல் ஏக தள விமானம் திராவிட கலை பாரம்பரியத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.  அதன் நாற்புறமும்,  ஜினர் சிலைகள் சாமரை தேவர்களுடனும்மூலையில் இரு ரிஷ­ப சிலைகள் அமர்ந்த நிலையிலும் சுதை வேலைபாடுடன் காட்சி தருகிறது. சிகர பத்ம கலசம் உச்சியில் உள்ளன.  வேதி பகுதியின் வெளிப்புறம் பித்தி கம்பங்கள்பின்புறம் தேவ மாடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதனுள்  ஸ்ரீபார்ஸ்வநாதர் கற்சிலை உள்ளது.  ஆலய திருச்சுற்றின் வடபுற சுவரின் வழியே சென்றால் கிழக்கு நோக்கிய சன்னதியில் ஸ்ரீபார்ஸ்வநாதர்,  ஸ்ரீதரணேந்திரர்,  ஸ்ரீபத்மாவதி  உலோகச்சிலைகள் மேடையில் நிறுவப்பட்டுள்ளன. அதனை அடுத்து தென்புறம் நோக்கிய படி நான்கு சன்னதிகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.  முதலாவதாக ஸ்ரீக்ஷேத்ர பாலகர்அதனை யடுத்து ஸ்ரீகூஷ்மாண்டினிஸ்ரீமகாவீரர் (உலோகச்சிலையில்)ஸ்ரீபிரம்மதேவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின்  முகமண்டபத்தின்  முன்பகுதியில் பலிபீடமும் மேடையுடன் காணப்படுகிறது.
மற்ற ஜிநாலயங்களைப் போன்று தினபூஜைநந்தீஸ்வர தீபம்முக்குடை போன்ற விசே­ பூஜைகள்பண்டிகை கொண்டாட்டங்கள் அனைத்தும் செவ்வனே நடைபெற்று வருகிறது.

ஆலயத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தர்மகர்த்தா திரு. ஜ. தேவகுமார் குடும்பத்தினரால் நிருவகிக்கப் படுகிறது.

தொடர்பு கொள்ள: திரு. தேவ. ஜெயசுந்தர்  ‡   செல். +91 7502088802




Metal idols of Jinalaya are exhibits on a platforms and a vertical gallery in the Artha Mandapam. Daily pooja statues are seated under the main deity. The mugamandap has an altar at the front edge. A single stage proportionate Viman was crowned the garbahriham displays four Jinars with whisk maids and twin bulls at the corners of each direction. Shikhar, padmam and Kalash are on the peak of tower. On the back of garbhagriha a small idol of Shri Parshwanathar is seated inside a Deva madam.

Opening of northern wall, the annexture of the temple, got five shrine rooms. On the east facing Shri Parshwanathar idol with Shri Dharanendran and Shri Padmavathy idols are on a stepped podium. Remaining four shrines of facing south are Shri Kshetrabalagar, Shri Kooshmandini, Shri Mahaveerar and Shri Brahmadevar with Shri Poorna and Shri Pushkala devis were installed consecutively. All are surrounded by compound wall.

The temple is administered by trustees of Shri J.Devakumar’s family, Cuddalore port.

The poojas, rituals and festivals are conducted regularly. A definite visit by the passersby might safeguard the treasure for future.

Contact No. Shri D. Jayasundar +91 91 7502088802






Sunday, February 15, 2015

KATTUMALAIYANUR - காட்டுமலையனூர்


Shri  MAHAVEERAR  JAIN TEMPLE  --  ஸ்ரீ மஹாவீரர் ஜிநாலயம்





Location:
lies on the Google map in the coordination of (12.1892, 79.17331) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click KATTUMALAIYANUR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :   காட்டுமலையனூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:-

Tindivanam → Gingee → Pennathur → Karungalikuppam → Kattumalaiyanur  = 65 kms.

Kanchipuram → Vandavasi → Chetpet → Pennathur → Karungalikuppam → Kattumalaiyanur  = 112 kms.

Villupuram  → Vettavalam road → (before) Konalur right turn → Kattumalaiyanur   = 53 kms.

Tiruvannamalai  → Villupuram road → Konalur (after)left turn → Kattumalaiyanur   = 19 kms.

Gingee → Pennathur → Karungalikuppam → Kattumalaiyanur  = 34 kms.


செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி → பென்னாத்தூர் → கருங்காலிக்குப்பம் → காட்டுமலையனூர் = 65 கி.மீ.

காஞ்சிபுரம்  → வந்தவாசி  → சேத்பட் → பென்னாத்தூர் → கருங்காலிக்குப்பம் → காட்டுமலையனூர் = 112 கி.மீ.

விழுப்புரம் → வேட்டவலம் சாலை → கோனலூர் முன் திருப்பம் → காட்டுமலையனூர் = 53 கி.மீ.

திருவண்ணாமலை  → வேட்டவலம் சாலை → கோனலூர் திருப்பம் → காட்டுமலையனூர் = 19 கி.மீ.

செஞ்சி → பென்னாத்தூர் → கருங்காலிக்குப்பம் → காட்டுமலையனூர் = 34 கி.மீ.









 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Kattumalaiyanur is a hamlet at a distance of 17 kms from Tiruvannamalai in the Vettavalam road. (take a north diversion at 14 kms) Despite the Jains are in single digit number, they can construct a beautiful Jinalaya in the last century and dedicate to Shri Mahaveer Jinar. But they are worshipping a five hundred years old Jinar statue in the Jinalaya. The mutilated no-lanchan Thirthankar sculpture was brought from the near river bed.

The Jinalaya has an opening on east side and alround compound wall. A small Kudakarai with iron grill gate and an altar in the open corridor were visible while entering the temple. The top of the main block has Shri Parshwanathar idol in a gallery and two lion specimens at the corner.  .........

காட்டுமலையனூர்  என்னும் சிறிய கிராமம்  17 கி.மீ. தொலைவில் திருவண்ணாமலையிலிருந்து  வேட்டவலம் சாலையில் (14 கி.மீ.ல்  வடதிசை திருப்பம்) உள்ளது. மிகச் சிறிய எண்ணிக்கையில்  சமணர்கள் வாழ்ந்திருந்தாலும்  சென்ற நூற்றாண்டின் இறுதியில்  அழகிய ஜிநாலயம் ஒன்றை எழுப்பி ஸ்ரீமகாவீரருக்கு அர்ப்பணித்துள்ளனர். ஆனால் அவ்வாலயத்தில் 500 ஆண்டுகளைக் கடந்த  ஜிநரின் சிற்பம் ஒன்று வழிபாட்டில் உள்ளது.  அருகிலுள்ள ஆற்று மணற்படுக்கையில் இருந்து கொண்டு வரப்பட்டது.

நாற்புறம் சுவருடன் அமைந்துள்ள இவ்வாலயம் கீழ்திசையில் நுழைவைக் கொண்டுள்ளது.  சிறிய குடகரை இரு இரும்புக் கதவுகளுடன் அடுத்து ஒரு பலிபீடத்துடன் தெருவின் பார்வையில் உள்ளது.  ஆலயத்தின் முன்பகுதியின் மேல் உள்ள அழகிய மாடத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் சுதைச்சிற்பம்  ஒன்று காட்சி அளிக்கிறது. இருபுறமும் சிங்கங்களின் சுதையுடன் காணப்படுகிறது. ....





The rectangular vedi-block was bifurcated by sanctum and a pavilion. Inside the sanctum sanctorum Shri Mahaveerar stone plate, latest carvings, was installed on plinth. It has tri-umbrella canopy, Yazhi with circular ornamental top edge carvings and two whisk maids on either side of the deity. A lion with thick mane is etched as lanchan at the bottom.

A simple Viman has Shikhar, padmam and Kalash is crowned on the top. Four Jinar mortar images in sitting posture are decorated along the grive section. A paved open corridor is surrounded the temple.

However very few Jains are living; the poojas, rituals and festivals are conducted regularly. 

A definite visit by the passersby might safeguard the treasure for future. (Otherwise degenerated  like southern Jain sites) 




Contact No. Shri A. Rishabadoss - +91 7708171956

***********
செவ்வக வடிவில் அமைந்துள்ள ஆலயம் கருவறை மற்றும் முன்மண்டபமாக பிரிக்கப்பட்டுள்ளது.  கருவறை வேதிகையில் ஸ்ரீமஹாவீரரின் அழகிய  தற்கால கற்சிற்பம்  ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  அதன் மேல்புறம் முக்குடை, இருபுற சாமரைதாரிகளுடன் காணப்படும் வட்டப்பகுதி  யாளி மற்றும் அழகிய பூவேலைப் பாடுகளுடன் செதுக்கப் பட்டுள்ளது. மேலும் அதன் கீழ்புறம்  அடர்ந்த பிடரியுடன் கூடிய சிம்மம் ஒன்று லாஞ்சனமாக வடிக்கப்பட்டுள்ளது.

கருவறைப் பகுதிக்கு மேல் எளிய வகை விமானம் பத்ம ஏக கலசத்துடன் காட்சியளிக்கிறது.  மேலும் அதன் கிரீவப்பகுதியின் நாற் திசைகளிலும் அழகிய நான்கு ஜிநர்களின் சுதைச் சிற்பம் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன.  வேதிப்பகுதியை சுற்றிலும்  தளமிடப்பட்ட  திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சமணர்கள்  வசித்தாலும்  அவ்வாலயத்தில் அனைத்து பூஜைகளும் பண்டிகைகளும் அந்தந்த பருவ நாட்களில் நடைபெறுகின்றது.

மெய்யன்பர்களின்   தொடர் விஜயத்தினால் மட்டுமே இது போன்ற வரலாற்று சின்னங்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்க முடியும்.  (இல்லாவிடில் தென்மாவட்ட  சமண கலைசின்னங்கள் போல் சீரழிந்துவிடும்) 

தொடர்புக்கு: ஸ்ரீவிருஷபதாஸ் -  -  +91 7708171956