Monday, September 29, 2014

AGARAKORAKOTTAI - அகரகொரகோட்டை


Shri PARSWANATHAR  JAIN  TEMPLE  -  ஸ்ரீ பார்ஸ்வ  ஜினர் ஆலயம் 



Map for Jain pilgrimage centres:   Click  AGARAKORAKOTTAI
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : அகரகொரகோட்டை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi road Thellar  Agarakorakottai = 26 k.m.

Gingee → Pennagar road vedal → Kunnagampundi → Agarakorakottai = 28 k.m.

Vandavasi → Tindivanam road Agarakorakottai = 14 k.m.

Villupuram → Tindivanam → Vandavasi road → Agarakorakottai = 66 k.m.

Chetpet  → Mazhaiyur   → Desur turn Desur (Thellar road)Agarakorakottai = 29 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → தெள்ளாறு அகரகொரகோட்டை  = 26கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் அகரகொரகோட்டை  = 28 கி.மீ.

வந்தவாசி → திண்டிவனம்  சாலை   → அகரகொரகோட்டை  14 கி.மீ.

விழுப்புரம் திண்டிவனம் → தெள்ளாறு  அகரகொரகோட்டை  = 66 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை → தேசூர்   → தெள்ளாறு சாலை  
அகரகொரகோட்டை  =  29 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



வந்தவாசியிலிருந்து திண்டிவனம் சாலையில் பயணித்து, தெள்ளாறுதேசூர் சாலையில் திரும்பிச் சென்றால் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அகரக்கொரக்கோட்டை கிராமம். பல நூற்றாண்டுகளாக சமணக் குடும்பங்கள் வாழ்ந்திருந்தாலும் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீபார்ஸ்வ ஜினரது ஆலயம் ஒன்றுள்ளது.

மிகவும் அழகாகவும் பராமரிக்க எளிதாகவும் தற்காலத்திற்கேற்ற வகையில் கீழ்திசை நோக்கிய வண்ணம் அமைத்துள்ளனர். திராவிட பாரம்பரிய முறையில் அமைந்துள்ளது. ஸ்ரீபார்ஸ்வநாதர் கற்சிலையுடன் கருவறையும், அதன் மேல் ஒருதள சிகரம், கலசத்துடன் காணப்படுகின்றது. முன்னர் முக மண்டபம் அழகாக அமைந்துள்ளது. கருவறையில் அனைத்து உலோகத்தினால் ஆன வழிபாட்டுக்கு உகந்த தேவதா சிலைகள் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.  அந்த வேதிக் கட்டமைப்புக்கு முன்னர் அழகிய சிறிய பலிபீடம் வட்ட தாங்கியுடன் அமைத்துள்ளனர். திறந்த திருச்சுற்றில் அழகிய நந்தவனம் நன்கு பராமரிப்புடன் காணப்படுகிறது.  அதனைச் சுற்றி மதிற்சுவருடன் கூடிய நுழைவு வாயிலும், (அதன் மேல் அஹிம்சை, தர்ம சக்கர சின்னங்களுடன்) , தென்கிழக்கு மூலையில் தெற்கு முகமாக அமைக்கப்பட்டுள்ளது.

நித்ய பூஜை, விசேஷ பூஜை மற்றும் நந்தீஸ்வர பூஜை போன்று அனைத்து வழிபாட்டு முறைகளும் செவ்வனே நடந்து வருகின்றது.

மேலும் பொன்னூர் குந்தகுந்தர்  மையத்தில் தொண்டு புரிந்து வந்த சிந்தாமணிச் செல்வர், அமரர் திரு.ஜெ.பானுராசனார் அவர்களும்,  அவரது தமையனார்,  புராணச் செம்மல் என அனைவராலும் போற்றப்பட்டு வரும் பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்களும், தற்போதைய சமண பேரவைத் தலைவர் திரு. அ.பு. அறவாழி  அவர்களும், பிறந்த ஊர் என்பது குறிப்பிடத் தக்கது.



Agarakorakottai village is located 14 kms from Vandavasi in Thellar-desur road. A Jinalaya was built in the last century, though the native jains are living so long years here.

Beautiful, compact and Dravidian art designed temple has Sanctum, crowned upon a Shikara and Kalash. Mugamandapa is constucted proportionately for conducting rituals and prayer. An altar is fixed on a round stand. A open corridor and a garden is surrounded by compound wall and an Opening at southeast corner. The, south facing, entrance arch has Ahimsa symbol icons.

Daily pooja, Nandheeswara pooja and Special Poojas are conducted regularly.

Beloved Pulavar Late Shri. J. Banurasanar, Editor of Arugan thathuvam, Purana Semmal Prof. J. Srichandran and present Samana Peravai President Shri ah.pu. Aravazhi were born; is noteworthy of the village.          





Sunday, September 28, 2014

VANGARAM - வங்காரம்


Shri ADHINATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம் 



Map for Jain pilgrimage centres:   Click Vangaram
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : வங்காரம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi road → Vangaram = 38 k.m.

Gingee → Vellimedupettai Vandavasi road → Vangaram = 46 k.m.

Vandavasi Chetpet road Vangaram = 8 k.m.

Villupuram → Tindivanam → Chetpet road → Vangaram = 83 k.m.

Chetpet  → Vandavasi road → vangaram turn → Vangaram  =  25 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → வங்காரம்    = 38கி.மீ.

செஞ்சி → வெள்ளிமேடுபேட்டை  வங்காரம்  = 46 கி.மீ.

வந்தவாசி சேத்பட்  சாலை   → வங்காரம்  = 8 கி.மீ.

விழுப்புரம் திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → வங்காரம்  = 83 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை → வங்காரம் திருப்பம்  → வங்காரம்  =  25 கி.மீ.





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!







Vangaram, a hamlet 8 kms from Vandavasi in the Chetpet road, travel and get a diversion at 4 kms distance. Jain families in the village, living since 15th century AD, totally renovate the ancient temple. However, the 15th century Moolnayak was left in the sanctum. Frequent repairs conceal the evidences of antiquity.

A brittle stone made Shri Adhinathar is in the womb-chamber, a artha mandap houses alloy idols of Important jain devathas and stone made 24 thirthankars, Navadevatha, Shri Brahmadevar shrine at the left side and Shri Kooshmandini at the right side of the pavilion.

East facing entrance Arch has an ancient statue of Shri Mahaveerar, taken from the near village Avanawadi. In the south-east a closed pavilion with door, north the Nagagraha shrine and Shri Padmavathy matha shrine of newly built. At the center of the corridor Thwajasthamp, altar, Manasthamp erected firmly.
Daily pooja, Nandheeswara dheep pooja, Navarathiri and other special day Poojas conducted regularly. Ugathi day and 15th day of August, functions are celebrate annually.

It is the birthplace of well-known person, Thiruvarapavalar Shri J. Appandairajan, a writer of Jain literature and poems.


வந்தவாசியிலிருந்து சேத்பட் சாலையில்  தென்புறம் திரும்பி சென்றால் 8 கி.மீ. தூரத்தில் வங்காரம் என்ற சிறிய கிராமம் வரும். கி.பி. 15ம் நூற்றாண்டுக்கு முன்னரே சமணர்கள் இவ்வூரில் வாழந்துள்ளனர். அப்போது கட்டப்பட்ட ஜிநாலயம் காலச் சுழலால் அழிந்து விட்டது. அவ்வாலயத்தில் இருந்த மூலவர் மட்டும் தற்போதுள்ள சீரமைக்கப்பட்ட  ஜிநாலயத்தில் நிறுவி  வணங்கப்பட்டு வருகிறார்.  ஆனால் சீரமைப்பு பணி தொடர்ந்து நடந்து வந்ததால் தொன்மைக்கான ஆதாரங்கள் அனைத்தும் அழிந்து காணப்படுகின்றது.

ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளது. அதன் நுழைவு வாயிலின் மேல் புறம் அழகிய மாடம் அமைக்கப் பட்டு அதனுள் மிகவும் பழமை வாய்ந்த அரஹந்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது. அதனை மஹாவீரர் எனவும் அக்கற்சிலை அருகிலுள்ள ஆவணபுரம் என்ற ஊரிலிருந்து கொணரப்பட்டதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மதிற்சுவருடன் அமைந்துள்ள ஆலயத்தின்  தென்கிழக்கில் பழமையான மண்டபம் ஒரு அறையாக மாற்றப்பட்டுள்ளது. வடபுறம் நவக்கிரக சன்னதியும், ஸ்ரீபத்மாவதி தேவியின் நூதன சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.

துவஜ மரம், பலிபீடம் மற்றும் மனத்தூய்மைக் கம்பத்துடன் ஆலய வேதிப்பகுதி தொடங்குகிறது. மகாமண்டபமும், அடுத்து அர்த்த மண்டபமும், அதனுள் இடது புறம் ஸ்ரீபிரம்ம தேவர் சன்னதியும், வலது புறம் ஸ்ரீதர்மதேவி சன்னதியும் உள்ளது. மேலும் கற்சிலைகளால் ஆன 24 தீர்த்தங்கரர்கள், நவதேவதா போன்றவை அழகாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கின்றன.   உலோகத்தினால் ஆன பல சிலைகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வளமைபோல் கருவறையில் உயரமான ஸ்ரீஆதிநாத பெருமான் எட்டு சிறப்பு அம்சங்களுடன் பலகை கல்லினால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை, மார்கழி முக்குடை மற்றும் விசேஷ பூஜைகள்.  வளமைபோல் நடந்து வருகின்றது.  அக்ஷய திரிதியை மற்றும் ஆகஸ்டு மாதம் 15ம் நாள் ஸ்ரீபார்ஸ்வநாதரின் உற்சவமும் சிறப்பாக ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.

மேலும் தமிழகத்தில் திருவறப்பாவலர் என அனைவராலும் அழைக்கப்படுபவரும், பல சமண நூல்களை வெளியிட்டு வருபவருமான வங்கை சிங்கம் திரு. J. அப்பாண்டைராசன் அவர்கள் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.



Saturday, September 27, 2014

PONNUR - பொன்னூர்


Shri ADHINATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம் 




Location  lies on the map in the coordination of (12.47093, 79.54247) put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click  Ponnur
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பொன்னூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi road → Ponnur = 36 k.m.

Gingee → Vellimedupettai Vandavasi road → Ponnur = 48 k.m.

Vandavasi → Tindivanam road Ponnur = 8 k.m.

Villupuram → Tindivanam → Vandavasi road → Ponnur = 75 k.m.

Chetpet  → Vandavasi road → vangaram turn → Ponnur  = 28 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை பொன்னூர்   = 33கி.மீ.

செஞ்சி → வெள்ளிமேடுபேட்டை  பொன்னூர்  = 45 கி.மீ.

வந்தவாசி → திண்டிவனம்  சாலை   → பொன்னூர்  = 7கி.மீ.

விழுப்புரம் திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → பொன்னூர்  = 72 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை வங்காரம் திருப்பம்  → பொன்னூர்  =  28 கி.மீ.








 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!







வந்தவாசி திண்டிவனம் சாலையில் 4 கி.மீ. பயணித்து  மேற்திசையில்  4 கி.மீ. சென்றால்  பொன்னூர் கிராமம் அடையலாம். ஸ்வர்ணபுரம் என்றழைக்கப்பட்ட இக்கிராமத்தில் கி.பி. 7 ம் நூற்றாண்டிலிருந்தே சமணர்கள் வாழ்ந்துள்ளனர். சமண பள்ளி ஒன்றும் இருந்திருக்கிறது. அவை அழிந்து போன பின், தற்போதுள்ள ஜிநாலயம் கி.பி. 12ம் நூற்றாண்டிலிருந்தே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கனக கிரி என்ற குன்றின் மீது அமைந்துள்ள ஆலயத்தின் மூலவரான ஸ்ரீஆதிநாதரை கனகமலை ஆழ்வார் என போற்றி பாடி யுள்ளனர்.
 
வட ஆர்க்காட்டில் அமைந்துள்ள சரித்திரப்புகழ் பெற்ற ஆலயத்தில் இதுவும் ஒன்றாகும். முனிவர் குந்த குந்தாச்சாரியார் வாழ்ந்த ஊராகும். அவரே ஏலாச்சாரியார் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். அவர் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. அவர் ஜைன அறம் தழைக்க உதவியவர். பொன்னூர் ஆலயத்தில் இருந்த ஸ்ரீபார்ஸ்வநாதர் மற்றும் ஸ்ரீஜ்வாலாமாலினியை வழிபாடு செய்தவர். அவர் ஓவ்வொரு ஞாயிறன்றும் வடமேற்கில் 5 கி.மீ. தொலைவிலுள்ள பொன்னூர் மலை என்ற நீலகிரி மலைக்கு எடுத்து சென்று அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார். அம்மலையை ஸ்ரீஜ்வாலாமாலினி அம்மன் உறைவிடமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வழிபாடுகளையும், பூஜை சடங்குகளையும் தொகுத்து அவர் சீடர் ஜ்வாலாமாலினி கல்பம் என்னும் நூலை வெளியிட்டுள்ளார். அப்படிமங்கள் இரண்டும் 17ம் நூற்றாண்டில் செய்துள்ளதாக கல்வெட்டு உள்ளது.

குன்றின் மீது ஏறிச்செல்ல வடபுறம் நுழைவாயில் அமைத்துள்ளனர். கீர்த்தி கம்பத்தின் வரவேற்புடன் அழகிய படிகளில் ஏறிச்சென்றால் சரியான அளவில் அமைக்கப்பட்ட கீழ்திசையை நோக்கிய அழகிய ஜிநாலயத்தை காணலாம். ஆலயத்தை சுற்றி விசாலமான திருச்சுற்று அதில் பலிபீடம், மனத்தூய்மைக் கம்பத்துடன் உள்ளே செல்ல மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தூண்கள் 13 ம் நூற்றாண்டைச் சார்ந்த கலையம்சத்துடன் அமைக்கப் பட்டுள்ளதை அங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  அதன் தென்புறத்தில் ஸ்ரீஜ்வாலாமாலினி சன்னதி அமைத்துள்ளனர். அதில் ஸ்ரீஜினவாணி உலோகத் திருவுருவமும் வைத்துள்ளனர். அவை சென்ற நூற்றாண்டில் சீரமைக்கப்பட்ட போது நிறுவப் பட்டுள்ளது. அடுத்து அரத்தமண்டபம்; வட்ட தூண்களின் அமைப்பைக் காணும் போது 12ம் நூற்றாண்டின் கலையம்சத்தை ஒத்துள்ளதாக தெரிகிறது.   அதில் பல உலோக படிமங்கள், சமண மதத்தில் முக்கியமாக வணங்கும்  அனைத்து தேவதா வடிவங்களும், மேடையில் வைக்கப் பட்டுள்ளன. அந்தராளம் எண்ணும் பகுதியும் கொண்டுள்ளது. அதில் நித்ய பூஜைக்கான தெய்வங்கள் வைக்கப் பட்டுள்ளன. ஆலயக் கருவறையில் ஸ்ரீ ஆதிநாதரின் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதன் மீது ஏக தள விமானத்தில் தீர்த்தங்கரர்கள் சுதை வடிவங்கள் அமைத்து வட்டமான கூம்பு வடிவ சிகரமும், அதில் கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய திருச்சுற்றின் மேற்கில் ஸ்ரீகுந்தகுந்தர் சன்னதி தனியாக அமைக்கப் பட்டுள்ளது. வடபுறம் நவக்கிரக மேடையும், கலச மண்டபமும் கட்டியுள்ளனர்.

அவ்வூரில் நவராத்திரி போன்ற பண்டிகை நாட்களில் வழிபாடு செய்ய தனியான ஆலயம் ஒன்றும் அமைத்துள்ளனர். அங்கு கருவறையில்  ஸ்ரீஜினவாணி மற்றும் ஸ்ரீ பத்மாவதி உலோகச் சிலைகள் அழகிய விமானத்தில் வைக்கப் பட்டுள்ளது.
நித்ய பூஜை, விசேஷ பூஜைகள், நந்தீஸ்வர பூஜை போன்றவை செவ்வனே நடைபெறுகின்றது. மேலும் யுகாதி ஸ்ரீபார்ஸ்வநாதர் திருவீதி யுலா, குளத்தங்கரை பூஜை, காணும் பொங்கல் யக்ஷன், யக்ஷி திருவிழா போன்ற தனி விழாக்களும் நடைபெறுகிறது.





Ponnur: An ancient and historical Jain pilgrimage place near Vandavasi town; 4 kms from Tindivanam salai and take diversion at 4 kms in the west direction.

Since 7th Century AD jains were settled and a Samanapalli is also there. The present temple is built in 12th Century AD. His holiness Helachariyar alias KundKundar has been lived in the village. He worshipped the present Moolnayak statue, Shri Adhinathar. He had deep Bakthi with the Yakshi Shri Jawalamalini devi and offered a way of worshipping rituals through a Agamam “Jwalamalini Kalp” ( Mantras; which is a collection of his pray methods).

The village is also call as Swarnapuram and the hill, where the temple built, call as Ganagagiri. So the Moonayak mentioned as “Ganagamalai aazhwar” in the poems.  
On a small hill, the beautiful temple built in well formulate layout. North facing entrance has few steps to reach. At the bottom, a Keerthisthamp invites the devotees. The east-facing temple, surrounded by fortified wall corridor. Shri Adhinathar, 12th century statue, is in the sanctum. then Anthralam had daily pooja idols; the Artha mandap houses the  metal idols of Jain important God, Goddess and ritual models. The round shaped pillars shows as 12th century fashion. the Mahamandap has a square pillars shows as 13th century style of art. Shri Jawalamalini shrine also built in south.

An altar and Manasthamp pillar erected in the corridor. On the west a separate shrine with Shri Kundkundar, Navagraha stand and Kalash mandap (pavilion) are there.
Another one is also in the village near the historical temple. Shri Jinavani and Shri Padmavathy matha idols was established inside for whorship.


All poojas like daily, quarterly and annual cycle are conducted regularly. Especially Yugathi festival, Kanum pongal and Navarathri festivals are celebrated.